polling set to take place in Tamil Nadu tomorrow, 5.73 crore people are set to vote, with 4,023 candidates in the fray google
தமிழ்நாடு

”234 தொகுதிகள், 4,023 வேட்பாளர்கள்” : 5.73 கோடி வாக்காளர்கள், 75,064 வாக்​குச்​சாவடிகள் : பரபரக்கும் தமிழகம்!

தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், களத்தில் 4,023 வேட்பாளர்கள் உள்ள நிலையில், 5.73 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.

Kannan

தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழக சட்டமன்றம் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறது. 234 உறுப்பினர்களை தேர்ந்து எடுக்க, நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்காக சுமார் 45 நாட்கள் நடைபெற்ற பிரசாரம் நேற்று மாலையோடு ஒய்ந்தது.

தலைவர்கள் பரப்புரை

தேர்​தலில் மொத்​தம் 4,023 வேட்​பாளர்​கள் போட்​டி​யிடு​கின்​றனர். சென்னை கொளத்​தூரில் முதல்​வர் ஸ்​டா​லின், சேலம் எடப்​பாடி​யில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, சென்னை நந்​தனத்​தில் தவெக தலை​வர் விஜய், ஸ்ரீபெரும்​புதூரில் தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை...

சென்னை மயி​லாப்​பூரில் தமிழிசை சவுந்​தர​ராஜன், சாத்​தூரில் நயி​னார் நாகேந்​திரன், தரு​மபுரி​யில் பாமக தலை​வர் அன்​புமணி, சென்னை எழும்​பூரில் சசிகலா, அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன், காரைக்​குடி​யில் நாதக மாநில ஒருங்​கிணைப்​பாளர் சீமான் ஆகியோர் தங்​கள் இறு​திக்​கட்ட பிரச்​சா​ரத்தை நிறைவு செய்​தனர்.

வெளியாட்கள் வெளியேற்றம்

தொகு​திக்கு வெளியே இருந்து அழைத்து வரப்​பட்ட அனைத்து அரசி​யல் கட்சி நிர்​வாகி​கள், கட்​சிப் பணி​யாளர்​கள் மற்​றும் அத்​தொகு​தி​யின் வாக்​காளர்​ அல்​லாதோர், வெளி​யேற்றப்பட்டு வருகிறார்கள். திருமண மண்​டபங்​கள், தங்​கும் விடு​தி​களில் போலீசார் சோதனை நடத்தி, வெளியூர் ஆட்களை வெளியேற்று வருகிறார்கள்.

மதுக் கடைகள் மூடல்

இந்த 48 மணி நேர அமைதி காலத்தை மது​விலக்கு நாளாக தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது. அதனால் நேற்று முதல் நாளை நள்​ளிரவு 12 மணி வரை மதுக்​கடைகள், மதுக்​கூடங்​களை மூடப்பட்டு இருக்கும்.

5.73 கோடி வாக்களிக்கின்றனர்

இந்த தேர்​தலில் 5.73 கோடி பேர் வாக்​களிக்க உள்​ளனர். இதற்​காக 75,064 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. அங்கு பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதி​களும் செய்​யப்​பட்​டுள்​ளன.

300 கம்பெனி துணை ராணுவம்

தேர்​தல் பாது​காப்பு பணி​யில் துப்​பாக்கி ஏந்​திய 300 கம்​பெனி துணை ராணுவப் படை​யினர் ஈடு​பட்டு வரு​கின்​றனர். மேலும் 83,875 காவல் துறை பணி​யாளர்​கள், 40,427 காவல் துறை அல்​லாத பணி​யாளர்​களும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

வாக்​குச் சாவடி பணி​யில் 3.40 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட அரசு ஊழியர்​கள் ஈடு​படு​கின்​றனர்.

இதுவரை ரூ.1,200 கோடி பறிமுதல்

தேர்​தல் நடத்தை விதி​கள் அமலுக்கு வந்த மார்ச் 15-ம் தேதி​யில் இருந்​து, தலா 2,106 பறக்​கும் படைகள், நிலைக் கண்​காணிப்​புக் குழுக்​கள் நடத்​திய சோதனை​யில் நேற்று வரை சுமார் ரூ.1,200 கோடிக்கு மேல் ரொக்​கம், மது​பானங்​கள், தங்​கம், வெள்ளி பொருட்​கள் மற்​றும் வாக்​காளர்​களுக்கு வழங்​கு​வதற்​காக கொண்டு செல்​லப்​பட்ட இலவசப் பொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

காலை 7 முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு

234 தொகு​தி​களுக்​கும் 136 பொது பார்​வை​யாளர்​கள், 50 காவல் பார்​வை​யாளர்​கள் மற்​றும் 150 செல​வின பார்​வை​யாளர்​கள் தொடர் கண்​காணிப்​பில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். வாக்​குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடை​பெறுகிறது.

வாக்களிக்க தேவையான ஆவணங்கள்

12 ஆவணங்​கள்: வாக்​காளர் அட்டை இல்​லா​விட்​டால் ஆதார் உள்​ளிட்ட 12 ஆவணங்​களைக் காட்டி வாக்​களிக்​கலாம் என தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது.

*ஆதார் அட்​டை

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு​தி​யளிப்​புத் திட்​டப் பணி அடை​யாள அட்​டை

* புகைப்​படத்​துடன் கூடிய வங்கி அல்​லது அஞ்​சல​கக் கணக்​குப் புத்​தகங்​கள்

* ஓட்​டுநர் உரிமம்

* வரு​மான வரி நிரந்தர கணக்கு எண் அட்​டை

* இந்​தி​யக் கடவுச்​சீட்​டு

* புகைப்​படத்​துடன் கூடிய ஓய்​வூ​திய ஆவணம்

* மத்​திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறு​வனங்​கள், வரையறுக்​கப்​பட்ட பொது நிறு​வனங்​களின் தொழிலா​ளர்​களுக்கு வழங்​கப்​பட்ட புகைப்​படத்​துடன் கூடிய பணி அடை​யாள அட்​டைகள்

* நாடாளு​மன்ற, சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களுக்கு வழங்​கப்​பட்​டுள்ள அடை​யாள அட்​டை

* இந்​திய அரசின் சமூக நீதி மற்​றும் அதி​காரமளித்​தல் அமைச்​சகத்​தால் வழங்​கப்​பட்ட இயலாமைக்​கான தனித்​து​வ​மான அடை​யாள அட்டை

உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஒன்றை காண்​பித்து வாக்​களிக்​கலாம்.

====================