கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு
கோடை விடுமுறை முடிந்து அனைத்து மாணவ மாண்விகளும் புதிய கல்வி ஆண்டில் அடியெடித்து வைத்துள்ளனர் , மேலும் புத்தாக மழலையர்களும் அடுத்த வகுப்பிற்கு செல்லும் மாணவர்களும் உற்சாகமாக நுழைத்துள்ளனர் , இந்த நிலையில் இவரக்ளுக்கு இந்த ஆண்டிற்கான தேர்வு அட்டவணைகள் பள்ளிகல்வி துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது
இந்த ஆண்டிற்கான காலாண்டு தேர்வு
பள்ளிகளுக்கான முதலாவது முக்கியத் தேர்வாக இருப்பது காலாண்டுத் தேர்வாகும் , இந்த தேர்வானது வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 25ஆம் தேதி வரை நடைபெறும் என்றும்,
இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை மாணவர்களுக்குக் காலாண்டுத் தேர்வு விடுமுறை அளிக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அரையாண்டு் தேர்வு:
அதன்ப்படி இரண்டாம் பருவத்திற்கான அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும் ,தேர்வு முடிவடைந்ததும், டிசம்பர் 24ஆம் தேதி முதல் 2027 ஜனவரி 3ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என்றும் நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கியமான பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களும் அறிவிப்பு
தேர்வுக்கால விடுமுறையோடி சேர்த்து , அதனுடன் இணைந்த விடுமுறைக்காலங்களை தவிர்த்து, முக்கியம்மான பண்டிக்கை தினங்கள் ,பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களும் நாட்காட்டியில் இடம்பெற்றுள்ளது.அதனப்படி பொங்கல் விடுமுறை 2026 ஜனவரி 14ம் தேதி முதல் ஜனவரி 18ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டின் இறுதி வேலை நாள்
அதனப்படி நடப்பு 2026-27 கல்வியாண்டின் இறுதிப் பள்ளி வேலை நாளாக 2027 ஏப்ரல் 23ஆம் தேதி என்று பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது . அதன் தொடர்ச்சியாக, 2027 ஏப்ரல் 24ஆம் தேதி முதல் மாணவர்களுக்கான கோடை விடுமுறை தொடங்கும் எனப் பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
======================