சிங்கப்பென் சிறப்பு அதிரடி படை
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக பிரச்சாரத்தில் தமிழக வெற்றி கழகம் பெண்கம் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிங்கப்பெண் சிறபு அதிரடி படை உருவாக்கபடும் என்று தெரிவித்திருந்தார், இது பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலெ முற்றிலும் செயல்படுவதாக இருக்கும் என்று தவெக அறிவித்திருந்த்து
முதல்வர் விஜயால் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட சிங்கப்பெண் படை
சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ,பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார் , இந்த சூழலில் இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை ஐ.ஜி.யாக பவானீஸ்வரி. ஒரு டிஎஸ்பி , 2 துணை டிஎஸ்பிக்கள் என 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக மே 29ம் தேதி தொடங்கி வைத்தார்
தனித்துவமாக தெரியும் வகையில் சீறுடை வடிவமைப்பு
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சின்னத்தில் தைரியம், வேகம், அறிவுத்திறனைப் பறைசாற்றும் வகையில் சிங்கத்தின் முகம் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சீருடை கருப்பு நிற தொப்பி. பெல்ட் கரு நீல வண்ண சட்டை, காக்கி பேண்ட் மற்றும் கருப்பு நிறத்திளாலான பெல்ட் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .
பயன்பாட்டிற்கு வந்த சிங்கப்பெண் சிறப்பு படை
தமிழகத்தின் முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு முதல் கையெழுத்தாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படைக்கு கையெழுத்திட்டார் , இந்த படையில் அனைத்து தலைமை பொறுப்புகளையும் பெண்களே நிர்வகிப்பர். முதல்வர் விஜய் இந்த திட்டத்தினை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்த பிறகு , தற்போது இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது,
இந்த சூழலில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு புதிய வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், அவசர காலங்களில் துரிதமாக களமிறங்கி நடவடிக்கை எடுக்கவும், பெண்கள் மட்டுமே இடம்பெறும் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப் படை கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இந்த படை தற்போது சென்னை டிஜிபி அலுவலக வளாகத்தில் தற்காலிகமாக செயல்படுகிறது.
இந்நிலையில், டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி,சென்னை அசோக் நகரில் உள்ளகாவல் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையின் நிரந்தர தலைமையகத்தை அமைக்க ஐ.ஜி. பவானீஸ்வரி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதையொட்டி, அலுவலக கட்டமைப்பு, கட்டுப்பாட்டு அறை, தகவல் தொடர்பு மையம் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன
அசோக் நகரில் உள்ள காவல் பயிற்சிக் கல்லூரி வளாகம் ஏற்கெனவே தமிழக காவல் துறையின் முக்கிய புலனாய்வு மற்றும் சிறப்புப் பிரிவுகளின் மையமாக விளங்கி வருகிறது. மாநில சைபர் க்ரைம், பொருளாதார குற்றப்பிரிவு, சிலை கடத்தல் தடுப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு என பல்வேறு முக்கிய பிரிவுகள் இங்கு இயங்கி வருகின்றன.
அதே வளாகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை தலைமையகமும் அமைக்கப்படுவதால், ஒருங்கிணைந்த காவல் நிர்வாகம், விரைவான தகவல் பரிமாற்றம் மற்றும் அவசர நடவடிக்கைகளை மேலும் திறம்பட மேற்கொள்ள முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
தகவல் தொடர்பு சாதனங்களை வாங்கும் பணி தீவிரம்
சிங்கப்பெண் அதிரடிப் படையை தொழில்நுட்ப ரீதியாக வலுப்படுத்தும் வகையில், அதிநவீன ட்ரோன்கள், கண்காணிப்பு உபகரணங்கள், நவீன தகவல் தொடர்பு சாதனங்களை வாங்கும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் பகுதிகள், முக்கிய விழாக்கள், பெண்கள் பாதுகாப்பு பணிகள் மற்றும் அவசர மீட்பு நடவடிக்கைகளில் இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன
துடிப்புமிக்க 2,500 பெண் காவலர்களை இந்த படைக்கு புதிதாக தேர்வு செய்யும் வகையில், விதிமுறைகளை இறுதி செய்யும் பணியும் நடந்து வருகிறது. வயது வரம்பு, உடல் தகுதி, கல்வித் தகுதி, தொழில்நுட்ப அறிவு, மன உறுதி, சிறப்பு பயிற்சிக்கான திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் எழுத்து மற்றும் உடல் தகுதிதேர்வு நடைமுறை வகுக்கப்பட்டுவருகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார்.
அமல்படுத்தப்பட்ட சில நாள்களிலேயே குற்றங்கள் தடுப்பு
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே பல்வேறு வகையான பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது . குறிப்பாக 10க்கும் மேற்ப்பட்ட குழந்தை திருமணங்கள் தடுத்தி நிறுத்தப்பட்டுள்ளது . பலவேறு குழந்தைகள் மீட்கப்ப்டு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
============================