தமிழ்நாடு

திமுக நகர்மன்றத் தலைவி பதவி இழப்பு : திமுக கவுன்சிலர்களும் காரணம்

சங்கரன்கோவிலில் திமுக நகர்மன்ற தலைவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களும் வாக்களித்ததால் அவர் பதவி இழந்துள்ளார்.

MTM

30 வார்​டு​களை கொண்ட சங்​கரன்​கோ​வில் நகராட்​சி​யில் 9 வார்​டு​களில் திமுக வென்​றது. 12 வார்​டு​களை அதி​முக கைப்​பற்​றியது. இருந்தபோதும் கூட்​டணி கட்​சி​களின் தயவில் நகராட்சி தலை​வர் பதவியை அதிர்​ஷ்டக் குலுக்​களில் திமுக கைப்​பற்​றியது .

தென்​காசி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்​பாளர் சரவணனின் மனைவி உமா மகேஸ்வரி தலைவரானார். அதி​முக-வைச் சேர்ந்த கண்​ணன் (எ) ராஜு வைஸ் துணைத் தலைவரானார். இதனிடையே தலைவர் உமா மகேஸ்​வரிக்​கும் திமுக கவுன்​சிலர்​களுக்​கும் தொடக்கம் முதலே மோதல் போக்கு இருந்ததாக கூறப்படுகிறது.

அதி​முக கவுன்​சிலர்​களு​டன் திமுக கவுன்​சிலர்​கள் சிலரும் சேர்ந்​து​கொண்டு உமா மகேஸ்​வரிக்கு எதி​ராக போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். 2023 டிசம்​பரில் உமா மகேஸ்​வரிக்கு எதி​ராக நம்​பிக்கை இல்லா தீர்​மானத்​தைக் கொண்டு வந்​தார்​கள். ஆனால் அப்​போது, அமைச்​சர்​கள் தலை​யிட்டு தீர்​மானத்தை வாக்​கெடுப்​புக்கு வரவி​டா​மல் தடுத்​ததாக கூறப்பட்டது.

இந்த நிலை​யில், பொது​மக்​களுக்​கான அடிப்​படை வசதி​களை செய்து தரவில்​லை, கவுன்​சில் கூட்​டத்தை முறை​யாக கூட்​ட​வில்​லை உள்​ளிட்ட புகார்​களைச் சொல்லி திமுக மற்றும் கூட்டணிக்கட்சி கவுன்சிலர்கள், அதி​முக கவுன்​சிலர்​களுடன் ஒன்று சேர்ந்து மீண்​டும் உமா மகேஸ்​வரிக்கு எதி​ராக நம்​பிக்கை இல்லா தீர்​மானத்தை தாக்​கல் செய்தனர். நம்பிக்கையில்லா தீர்மானம் 24/30 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றதால் உமாமகேஸ்வரி தகுதி இழந்தார்.

இதற்கான முறையான அறிவிப்பு சென்னை அலுவலகத்தில் இருந்து வெளியாகும் என்று நகராட்சி ஆணையர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.