Speaker announced that Legislative Assembly session will continue until September 8 AI generated
தமிழ்நாடு

”செப்டம்பர் 8 வரை” பட்ஜெட் கூட்டத்தொடர் : மாலை 6.30 வரை நடத்த திட்டம் : அவை நடவடிக்கைகள் முழுநேரலை, சபாநாயகர் பிரபாகர்!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அறிவித்து இருக்கிறார்.

Kannan

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர்

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜேசிடி பிராபகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது

அனைத்து கட்சியினர் பங்கேற்பு

தவெக அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், திமுக தரப்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர், எவ வேலு, அதிமுக சார்பில் ஓ எஸ் மணியன், தளவாய் சுந்தரம், சிபிஐ சார்பில் தளி ராமச்சந்திரன், பாமக சார்பில் சௌமியா அன்புமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாளை மறுநாள் முதல் பட்ஜெட் விவாதம்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், "வேளாண் நிதிநிலை அறிக்கை நாளை வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படும். நாளை மறுநாள் முதல் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும்.

செப்.8 வரை பட்ஜெட் கூட்டம்

ஆகஸ்ட் 8, 9 விடுமுறை. ஆகஸ்ட் 10, 11ல் பட்ஜெட் மீதான விவாதம் தொடரும். செப்டம்பர் 8 ஆம் தேதி வரை தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்.

மாலை 6.30 மணி வரை பேரவை

காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரையும் மாலை 4.30 முதல் 6.30 மணி வரையும் பேரவையை நடத்த விவாதித்துள்ளோம். தேவைப்பட்டால் மாலை நேரத்தில் சட்டப்பேரவை நடக்கலாம்.

செப். 7ல் முதல்வர் விஜய் பேசுவார்

செப்டம்பர் 7 ஆம் தேதி காவல்துறை, தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை மீதான பதிலுரையில் முதலமைச்சர் விஜய் பேசுகிறார்.

முழுமையாக நேரலை

சட்டசபை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.

அதிமுக எம்எல்ஏக்கள் விவகாரம்

அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பயுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், "ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏக்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

சட்டமன்றகுழு தலைவர் இபிஎஸ் தான்

இன்றைய நிலவரப்படி எடப்பாடி பழனிசாமிதான் அதிமுக சட்டமன்ற குழு தலைவர்" என சபாநாயகர் விளக்கம் அளித்தார்.

================