'Thai Maman Gold Ring' scheme to be implemented from September 15: TN Budget 2026! google
தமிழ்நாடு

செப்டம்பர் 15 முதல் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்': தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதியமைச்சர் முக்கிய அறிவிப்பு!

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப். 15 அண்ணா பிறந்தநாளில் தொடக்கம்.

Kavitha prasanna

'Thai Maman Gold Ring' scheme to be implemented from September 15: TN Budget 2026!

தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் பயன்பாட்டுக்கு வரும் என்று நிதியமைச்சர் மரியா வில்சன் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் தாக்கல் மற்றும் நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, 2026-27 ஆம் நிதியாண்டிற்கான தனது முதல் நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்தது. நிதி அமைச்சர் மரியா வில்சன் பட்ஜெட் உரையாற்றுகையில் இத்திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்:

திட்டம் தொடங்கும் நாள்

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி முதல் இத்திட்டம் முறைப்படி பயன்பாட்டுக்கு வருகிறது.

பயன்பெறுவோர் தகுதி

2026 ஜூன் 22 (முதலமைச்சர் விஜய் பிறந்தநாள்) முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைவார்கள்.

நிதி ஒதுக்கீடு

இத்திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ. 560 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த ஆண்டுதோறும் ரூ. 755.83 கோடி நிதி தேவைப்படும் என்பதால், அதற்கான ஒப்படைப்புப் புள்ளிகளை (Tenders) உடனடியாகக் கோருமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

திட்டத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் நோக்கங்கள்

தாய்மாமன் சீர்

அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு தாயையும் குழந்தையையும் கௌரவிக்கும் வகையில், 'தாய்மாமன் சீர்' என்ற முறையில் குழந்தைக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.

பயனாளிகள் தகுதி

அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.

அரசு சுகாதாரச் சேவைகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதுடன், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் பிறப்பை நினைவு கூரவும், தாய்மையின் மகிழ்ச்சி மற்றும் முக்கியத்துவத்தைக் கொண்டாடும் நோக்கிலும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

=====