The Passing of Screenplay King K. Bhagyaraj – The History of an Era! Ai generated
தமிழ்நாடு

விடைபெற்றார் திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ் : ஒரு சகாப்தத்தின் சரித்திரம்!

ஒட்டுமொத்த தென்னிந்தியத் திரையுலகினரும், ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

Kavitha prasanna

The Passing of Screenplay King K. Bhagyaraj – The History of an Era!

தமிழ் சினிமாவின் அசாத்திய திறமைசாலி, ரசிகர்களால் 'திரைக்கதை மன்னன்' என்று அன்போடு அழைக்கப்படும் இயக்குநர், நடிகர் மற்றும் எழுத்தாளருமான கே.பாக்யராஜ் சென்னையில் காலமானார்.

காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பாக்யராஜ், சிகிச்சை பலனின்றி தனது 73-ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

அவரது மறைவு செய்தி கேட்டு ஒட்டுமொத்த தென்னிந்தியத் திரையுலகினரும், ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

பாரதிராஜாவின் பாசறை முதல் 'திரைக்கதை மன்னன்' அந்தஸ்து வரை

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோயில் கிராமத்தில் கிருஷ்ணசாமி - அமராவதி தம்பதியருக்கு மூன்றாவது மகனாக 1953 ஜனவரி 7-ல் பிறந்தார் பாக்யராஜ்.

சினிமா மீதான அதீத காதல்

திரைப்பட கலை மீது கொண்ட ஈர்ப்பால், 1977-ல் இமயம் பாரதிராஜாவின் முதல் படமான '16 வயதினிலே' திரைப்படத்தில் உதவி இயக்குநராக தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.

புதிய வார்ப்புகள்

தொடர்ந்து 'கிழக்கே போகும் ரயில்', 'சிகப்பு ரோஜாக்கள்' ஆகிய படங்களில் பணியாற்றியதுடன், சிறிய வேடங்களிலும் தோன்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பின்னர் 'புதிய வார்ப்புகள்' படத்தில் பாரதிராஜாவால் வசனகர்த்தாவாகவும், கதாநாயகனாகவும் நிலைநிறுத்தப்பட்டார்.

பாக்யராஜின் இயக்குநர் அவதாரம்

1979-ல் 'சுவர் இல்லாத சித்திரங்கள்' படத்தின் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்த பாக்யராஜ், அதன்பின் தமிழ் சினிமாவில் தனது அசைக்க முடியாத முத்திரையைப் பதிக்கத் தொடங்கினார்.

சினிமாவில் பாக்யராஜ் படைத்த சரித்திர மைல்கற்கள்

ஒரு கை ஓசை,, மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, விடியும் வரை காத்திரு, அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு, சின்ன வீடு, எங்க சின்ன ராசா, இது நம்ம ஆளு போன்ற ஏராளமான வெள்ளி விழாத் திரைப்படங்களை இயக்கி, நடித்து சாதனை படைத்தார்.

முந்தானை முடிச்சு வெள்ளிவிழா

1983-ல் இவர் இயக்கி, ஊர்வசியை அறிமுகப்படுத்திய 'முந்தானை முடிச்சு' திரைப்படம் வசூலில் புதிய சரித்திரம் படைத்தது. இப்படத்தில் இவர் கையாண்ட 'முருங்கைக்காய்' குறியீடு இன்றளவும் தமிழ் சினிமாவில் பேசப்படும் ஒரு விஷயமாகும்.

திரைக்கதையில் அசத்தல் 'அவசர போலீஸ் 100':

1977-ல் எம்.ஜி.ஆர் முதலமைச்சராவதற்கு முன் பாதியில் நின்றுபோன “அண்ணா நீ என் தெய்வம்” படத்தின் காட்சிகளை அடிப்படையாக வைத்து, அதற்குப் புதிய திரைக்கதை அமைத்து, தாமும் இரட்டை வேடத்தில் நடித்து 'அவசர போலீஸ் 100' என்ற மெகா ஹிட் படத்தை உருவாக்கிக் காட்டினார்.

பாலிவுட் வரை பாய்ந்த வேகம்

கமலஹாசன் நடிப்பில் வெளியான “ஒரு கைதியின் டைரி” படத்திற்கு கதை, திரைக்கதை எழுதிய பாக்யராஜ், அதனை இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து 'ஆக்ரி ராஸ்தா' என்ற பெயரில் இயக்கி பாலிவுட்டிலும் மாபெரும் வெற்றி கண்டார்.

பாக்யராஜ் எனும் பன்முகக் கலைஞர்

படங்களை இயக்குவது, நடிப்பது, கதை எழுதுவதோடு மட்டுமல்லாமல் 'இது நம்ம ஆளு' உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், 1988 முதல் 'பாக்யா' என்ற பிரபலமான வார இதழை நடத்தி இலக்கிய உலகிலும் முத்திரை பதித்தார்.

இயக்குநர்களை உருவாக்கிய ஆசான்

தனது குரு பாரதிராஜாவைப் போலவே, பாக்யராஜும் திரையுலகிற்குப் பல முன்னணி இயக்குநர்களை உருவாக்கிக் கொடுத்தார்.

இவருடைய பாசறையில் இருந்து உருவான ரா.பார்த்திபன், பாண்டியராஜன், வி.சேகர், லிவிங்ஸ்டன் மற்றும் ஜி.எம்.குமார் ஆகியோர் பிற்காலத்தில் தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இயக்குநர்களாக வலம் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்யராஜின் சொந்த வாழ்க்கை

ஆரம்பக் காலத்தில் நடிகை பிரவீணாவை மணந்த பாக்யராஜ், சில ஆண்டுகளில் அவர் நோய்வாய்ப்பட்டு இறந்ததைத் தொடர்ந்து, தனது தட்டாத ஜோடியான நடிகை பூர்ணிமாவைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குச் சரண்யா என்ற மகளும், சாந்தனு என்ற மகனும் உள்ளனர்.

பாக்யராஜின் அரசியல் பயணம்

அரசியலிலும் ஆர்வம் காட்டிய பாக்யராஜ், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருந்து பின் 'எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம்' என்ற சொந்தக கட்சியைத் தொடங்கினார்.

பின்னர் அதிமுக, திமுக எனப் பல்வேறு அரசியல் களங்களைக் கண்டு, இறுதியாக அரசியலில் இருந்து விலகி ஒரு பார்வையாளராக இருந்து வந்தார்.

திரையுலகினர் அஞ்சலி மற்றும் இறுதிச்சடங்கு

பாக்யராஜ் உடல் தற்போது சென்னை பாண்டி பஜாரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவரது மறைவு குறித்து திரையுலகினர் பேசுகையில், "இயற்கையான எதார்த்தமான மனிதர்களின் பலம் மற்றும் பலவீனங்களை நகைச்சுவையோடு திரையில் காட்டிய மாபெரும் கலைஞர் அவர்.

இந்திய சினிமாவின் மிகச்சிறந்த திரைக்கதை இயக்குநர்களில் ஒருவரை நாம் இழந்துவிட்டோம்" என வேதனையுடன் பகிர்ந்து வருகின்றனர்.

===