தனியார்மயமாகும் தூய்மை பணியாளர்கள் டெண்டர் ரத்து
தமிழ்நாட்டில் 25 மாநகராட்சிகள் உள்ள தூய்மை பணியாளர்களை தனியார் மயமாக்கும் ட் நோக்கில் அதனி டெண்டர் விடுவதற்கான அறிவிப்பை தவெக அரசு அறிவித்திருந்தது ,
அதாவது தாம்பரம், ஆவடி, ஓசூர், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார்மயமாக்க தவெக அரசு முடிவு செய்துள்ளது.
தூய்மை பணியாளர்களிடம் எழுந்த எதிர்ப்பு
இந்த புதிய அறிவிப்பு தூய்மை பணியாளார்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியது ,சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்ககளில் மக்கள் போரட்டத்தில் ஈடுப்பட்டிருந்த்து குறிபிடத்த்க்கது
கூட்டணி கட்சிகளிடையே எதிர்ப்பு
மாநகராட்சி தூய்மை பணியை தனியார்மயமாக்கும் டெண்டருக்கு கூட்டணி கட்சிகளிடமே எதிர்ப்பு கிளதேர்தலுக்கு முன் ஒரு பேச்சா, பின் ஒரு பேச்சா என கூட்டணி கட்சிகளே விமர்சித்திருந்தன.
குறிப்பாக விடுதலை சிறுத்தையின் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இத்திட்டதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்
டெண்டரை ரத்து செய்த அறிவித்த தவெக அரசு
இந்நிலையில் 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணியை தனியார்மயமாக்குவது தொடர்பான டெண்டர் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது , தூய்மை பணியாளர்கள் போராட்டம், கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பால் தவெக அரசு திட்டத்தை கைவிட்டுள்ளது குறிப்பிடத்தகது
திமுக ஆட்சியில் விடப்பட்ட ரூ 284 கோடி டெண்டர் ரத்து
திமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் வெவ்வேறு வார்டுகளில் நடைபாதை அமைப்பதற்கான டெண்டர்கள் விடப்பட்டன. அவை, 35 பேக்கேஜ்களாக பிரித்து ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இவற்றின் மொத்த மதிப்பு ரூ.284 கோடி, இந்த நிலையில் இந்த டெண்டர்களையும் தவெக அரசு ரத்து செய்துள்ளது
அடையாறு சாஸ்திரி நகர், பெசன்ட் நகர் போர்த் அவென்யூ, ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் அருகே உள்ள ராஜா முத்தையா சாலை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள பார்னபி சாலை மற்றும் மயிலாப்பூரில் உள்ள டாக்டர் பி.எஸ்.
சியாசாமி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் மற்றும் பிற தார் சாலைப் பகுதிகளில் நடைபாதைகள் அமைப்பதற்காக இந்த டெண்டர் விடப்பட்டிருந்தது.
டெண்டர் ரத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில்,
டெண்டர் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது , அறிக்கையில் தேவையற்ற பணிகள் சேர்க்கப்பட்டு இருப்பதால் அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படும் என்பதால் டெண்டர் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
முந்தைய ஆட்சியில் துவங்கப்பட்ட பணிகள் முதல்வர் விஜய் உத்தரவின் பேரில் வேகமாக ஆய்வு செய்யப்படுகின்றன என்று தெரிவித்துள்ளனர்
=====================