தமிழக பட்ஜெட் 2026, உழவர் நலன் மேப்பாட்டிற்காக ரூ.14,984 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு பட்ஜெட்டானது சட்டப்பேரவையில் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் , வேளாண்மை மற்றும் விவசாயிகளின் நலனுக்காக ரூ.14,984 கோடி நிதியானது ஒதுகீடு செய்யப்பட்டுள்ளது
விவசாயிகளுக்கென்று இடம்பெற்றுள்ள பட்ஜெட் அறிவிப்புகள்
தமிழக பட்ஜெட்டில் விவசாயிகளின் நலன் மற்றும் வேளாண்மை திட்டத்திற்காக ரூ.14,984 கோடி நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்லது , குறிப்பாக
கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன்வளம் மேம்பாட்டிற்காக ரூ.4,780 கோடி
ரூ57 கோடியில் 10,000 கறவை மாடுகள் விலை இல்லாமல் வழங்கப்படும்
ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வாங்க வட்டி மானியத்துடன் கடனுதவி
பணி இல்லாத காலத்தில் மீனவர்களுக்கு உதவித் தொகை ரூ7,000 ஆக உயர்வு
ரூ31 கோடியில் கால்நடைகளுக்கு காப்பீடு திட்டம் அகியவை விவசாயிகளுக்கான முக்கியமான அறிவிப்பாக வெளியாகியுள்ளது
அதனப்படி நகர்ப்புறத்தை ஒட்டுயுள்ள கிரமாங்களுக்கு ரூ 1000 கோடி நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ,மேலும் மாநிலன் தழுவிய வெற்றி வீடு திட்டமானது அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கிராமங்களில் பெண்களில் வாழ்வாதரத்தை முன்னேற்றும் வகையில் வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டத்திற்கு ரூ.110 கோடி நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
,மேலும் கால்நடை காப்போம் திட்டம் ரூ.31 கோடி நிதியானது ஒதுக்கப்பட்டுள்ளது
ஏஐ துறைக்கு ரூ.398 கோடி ஒதுக்கீடு
தமிழக பட்ஜெட்டில் செயற்கை நுண்ணறிவுக்கென்று ரூ.398 கோடி நிதியானது ஒதுக்கப்பட்டுள்ளது , மேலும்
வெற்றி மடிக்கணினி திட்டத்திற்கு, ரூ.2,000 கோடி மற்றும்
2031ம் ஆண்டிற்குள் 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது
செயற்கை நுண்ணறிவு, ஐடி துறைக்கு ரூ.398 கோடி
வீட்டுக் கூரைகளில் சூரிய மின் உற்பத்தி செய்ய மானியத்துடன் கூடிய புதிய திட்டம்
சென்னையில் மின் பகிர்மான திறன் ரூ.1,390 கோடியில் வலுப்படுத்தப்படும் , மேலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையை வலுப்படுத்துவத்ற்கென நிதியானது ஒதுக்கப்படுவதாகவும் தமிழக் பட்ஜெட்டில் அறிவிப்பானது வெளியாகியுள்ளது
இளைஞர்களுக்கான தொழில்திறன் பயிற்ச்சி
இளைஞர்களுக்கான தொழில்திறன் பயிற்சியை மேம்படுத்துவதற்கென்று 25,000 வாகன மெக்கானிக்குகளை உருவாக்க ரூ.3 கோடியில் பயிற்சி திட்டம் அளிக்கப்படும் என்றும்
ரூ.10 கோடி ஆரம்ப மூலதனத்துடன் TNSHIC சிறப்பு நோக்கு நிறுவனம்,
ரூ.10 கோடி செலவில் மாணவர் தங்கும் விடுதி மற்றும் உட்கட்டமைப்பு கழகம்
2031ம் ஆண்டிற்குள் 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சியானது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
============================