ரூ.2,000-க்கு மேலான் யுபிஐ பரிவர்தனை, கட்டணம் வசூலிக்கபடும்
யுபிஐ மூலம் ரூ.2,000-க்கு மேல் வணிகப் பரிவர்த்தனை மேற்கொண்டால் 0.25% முதல் 0.4% வரை கட்டணம் (எம்டிஆர் - வணிகர் தள்ளுபடி வீதம் ) விதிக்க மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசின் தகவல் கூறுவது என்ன
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதாவில் வங்கிகளும் சேவை நிறுவனங்களும் மின்னணு பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பதற்கான தடையை நீக்க நாடாளுமன்றத்தில் முன்மொழிந்த்தாகவும் ,
இதையடுத்து, ரூ.2,000-க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.25% முதல் 0.4% வரை கட்டணம் விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அன்றாட சிறு செலவுகள் இதனால் பாதிக்கப்படாது
இந்த அறிவிப்பு குறித்து குறித்து அதிகாரிகள் கூறும்போது ரூ.2,000-க்கு உட்பட்ட பரிவர்த்தனைகளுக்குக் இந்த கட்டணம் இல்லை என்றும் இதனால் காய்கறி, பால், மளிகைப் பொருட்கள் வாங்குவது மற்றும் ஆட்டோ, டாக்சி கட்டணம் செலுத்துவது போன்ற அன்றாட சிறு செலவுகளில் பாதிப்பு ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளனர்
எனவே, 95% பரிவர்த்தனைகள் இந்த கட்டண வரம்பிற்குள் வராது. மேலும், வணிகர்கள் இந்தக் கட்டணத்தை வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவார்களா அல்லது
தாங்களே ஏற்றுக்கொள்வார்களா என்பது அவர்களின் முடிவை பொறுத்ததேயாகும் என்ற சூழலும் உள்ளது ,ஆனால் இது அனைத்து தரப்பு மக்களிடத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது
அரசு தரப்பில் தெரிவித்துள்ளது என்ன
இந்த அறிவிப்பு குறித்து மத்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, மொத்த யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையில் ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளின் பங்கு 5% மட்டுமே என்றும் ஆனாலும், இவை மொத்த பரிவர்த்தனை மதிப்பில் 65% பங்கைக் கொண்டிருப்பதாகவும் அரசு தரப்பு தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது
=============================