'Vijayabhaskars' join TVK: Former ministers Anandan and Valarmathi are joining; a setback for Edappadi.  AI generated
தமிழ்நாடு

தவெகவில் இணையும் விஜயபாஸ்கர்கள் : முன்னாள் அமைச்சர்கள் ஆனந்தன், வளர்மதியும் இணைகிறார்கள் : எடப்பாடிக்கு பின்னடைவு...!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி .விஜயபாஸ்கர் மற்றும் எம் ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர்தவெகவில் நாளை இணைய உள்ளனர்

Rohini

தவெகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி, விஜயபாஸ்கர் , மற்றும் எம் .ஆர் விஜய்பாஸ்கர் ஆகியோர் நாளை தவெகவில் இணைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தவெகவில் ஐக்கியம் ஆகும் அதிமுகவினர்

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான ஆனந்தன் மற்ரும் திருச்சி முன்னாள் எம் ,ஏல்.ஏ வளர்மதிதியும் அதிமுகவில் இருந்து விலகி தவெக வில் இணைய உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது

சி விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளதாவது

அதிமுகவில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஜய்பாஸ்கர் , தவெகவில் இணைவதா என்ற ஆலோசனையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். ஆனாலும் அவரின் முடிவை அறிவிப்பது தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டே இருந்தது.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைய போவதாக சி. விஜயபாஸ்கர் தற்போது அறிவித்துள்ளார். அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததில் இருந்தே தவெகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்த நிலையில், தற்போது அதனை அவர் உறுதி செய்துள்ளார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைய போவதாக சி. விஜயபாஸ்கர் அறிவித்திருக்கிறார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நம்முடைய மண்ணுக்கும், மக்களுக்குக்கும் என்னுடைய பொது வாழ்வு பயணத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கு,

புதிய தொடக்கமாக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் என்னை இணைத்துக் கொண்டு என்னுடைய அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடரவிருக்கிறேன். என்று தெரிவித்துள்ளார்

எடப்பாடிக்கு மேலும் பின்னடைவு

ஏற்கனவே அதிமுக எம்,ஏல் ஏகள் ஆன மதுராந்தகம் தொகுதி மரகதம் குமாரவேல், பெருந்துறை தொகுதி ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் தொகுதி சத்யபாமா , இசக்கி சுப்பையா ஆகியோர் சபாநாயகரை சந்தித்து எம்எல்ஏ பதவியை ராஜினாம செய்திருந்தனர்

இந்த நிலையில் விராலிமலை சட்டமன்ற தொகுதி எம்,ஏல் ஏ வான சி. விஜயபாஸ்கர் மற்றும் கரூர் சட்டமன்ற தொகுதி எம்,ஏல் ஏ எம் . ஆர் விஜ்யபாஸ்கர் ஆகியோர் தனது பதவியை ராஜினாம செய்துள்ளன்ர் , இதன் மூலம் அரசியலில் அதிமுக பெரும் பின்னடைவை சந்திதுள்ளது

விரைவில் 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்த்ல்

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைவந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக் உய்ர்ந்து இருக்கும் நிலையில் , ஏற்கனவெ திருச்சி தொகுதியில் முதல்வர் விஜய் ப் ராஜினாம செய்திருந்தார்

இந்த நிலையில் இந்த 7 தொகுதிகளையும் , காலியான தொகுதியாக பேரவை தலைவர் அறிவித்திருந்தார் , விரைவில் இப்பகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படும்

===========================