white paper states that by 2031, the elderly population in Tamil Nadu will increase google
தமிழ்நாடு

”2031க்குள் முதியோர்கள் அதிகரிப்பு, வேலைக்கு செல்வோர் எண்ணிக்கை சரிவு” : வெள்ளை அறிக்கையில் பரபரப்பு தகவல்...!

2031ம் ஆண்டிற்குள் தமிழகத்தில் முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும்: பணிபுரிவோரின் எண்ணிக்கை குறையும் என வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Kannan

தமிழக நிதி அமைச்​சர் மரிய வில்​சன் வெளி​யிட்ட வெள்ளை அறிக்​கை​யில் கூறப்பட்டு இருப்பதாவது :

* வெள்ளை அறிக்கை 2026-27-ம் ஆண்​டுக்​கான இடைக்​கால வரவு செலவு திட்ட மதிப்​பீடு​களை ஆய்வு செய்​கிறது.

* மாநிலத்​தின் மொத்த வரி வரு​வாய் ரூ.2,29,579 கோடி​யாக, அதாவது 19 சதவீத வளர்ச்​சி​யுடன் கணிக்​கப்​பட்​டுள்​ளது.

* உண்​மை​யான வளர்ச்சி விகிதம் சுமார் 8 சதவீத​மாகவே இருக்​கும். வருவாய் சுமார் ரூ.2,08,000 கோடி​யாக மட்​டுமே இருக்​கும்.

* வரு​வாய் பற்​றாக்​குறை 2026-27-ம் ஆண்​டில் ரூ.90,500 கோடியை எட்​டக்​கூடும்.

* நிதிப் பற்​றாக்​குறை ரூ.1.22 லட்​சம் கோடி ரூபாய்க்கு மாறாக ரூ.1.64 லட்​சம் கோடி ரூபாயை நெருங்​கக்​கூடும்.

* தமிழகத்​தில் முதி​ய​வர்​களின் பங்கு 2011-ம் ஆண்​டில் 10.6 சதவீத​மாக இருந்த நிலை​யில், 2031ம் ஆண்​டுக்​குள் 18.2 சதவீத​மாக உயரும்.

* முதி​யோர் சார்ந்​திருக்​கும் விகிதம் 2036-ம் ஆண்​டுக்​குள் 32.7 சதவீத​மாக உயரும்.

* பணிபுரி​யும் வயதினர் எண்​ணிக்கை குறைந்து வரு​வ​தால், வரி செலுத்​து​வோரின் எண்​ணிக்​கை​யும் குறை​யும்.

* அதி​கரித்து வரும் முதி​ய​வர்​களின் எண்​ணிக்கை சமூகப் பாது​காப்பு மற்​றும் சுகா​தார சேவை​களுக்​கான செல​வினங்​களை அதி​கரிக்​கச் செய்​கிறது.

* இத்தகைய விளைவுகள் மாநிலத்தை கடன் வலையை நோக்கி தள்​ளும் என்று வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

===================