உச்ச தலைவராவதற்கு முன்பே இந்திய வந்த காமேனி
Ayatollah Ali Khamenei visit in India : ஈரானின் தலைவராவதற்கு முன்பே இந்தியாவின் காஷ்மீர், கர்நாடகாவில் மக்களை சந்தித்து உரையாடியிருக்கிறார்.
1980ம் ஆண்டு காஷ்மீர் வந்த கமேனி, அப்போதய சூழலில் காஷ்மீரில் சன்னி மற்றும் ஷியா முஸ்லிம்கள் இடையே பகைமை நிலவி வந்த நிலை .
அப்போது காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு வந்த அயத்துல்லா அலி காமேனி, சன்னி மசூதியில் நடைபெற்ற வெள்ளிக் கிழமை தொழுகையில் பங்கேற்று 15 நிமிடங்கள் உரையாற்றினார்.
சன்னி மற்றும் ஷியா முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
1981ம் ஆண்டு இந்தியா வந்த காமேனி
1981ம் ஆண்டு காமேனி பெங்களூரு மற்றும் அலிபூருக்கு வருகை புரிந்தார் . அப்போது அலிப்பூர் ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஈரான் அரசு உதவியுடன் கட்டப்பட்ட மருத்துவமனையையும் காமேனி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
குறிப்பாக தற்போது அலிப்பூர் முஸ்லிம் இளைஞர்கள் பலர், ஈரானில் தற்போது மதக் கல்வி பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் சென்ற முன்னாள் இந்திய பிரதமர்
இந்திய பிரதமராக இருந்த மன்மோகன் சிங், கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஈரான் சென்றபோது, தனது இந்திய பயண அனுபவத்தை பிரதமரிடம் பகிர்ந்து அயத்துல்லா அலி காமேனி நினைவு கூர்ந்துள்ளார் .
இந்தியாவை பாராட்டிய காமேனி
ஈரானில் உள்ள சீக்கியர்கள் அளித்த புத்தகங்கள் மூலம் சீக்கிய மதம் பற்றியும் இன்னும் சில ஒற்றுமைகளை பற்றியும் தெரிந்து கொண்டதாக காமேனி கூறினார்.
குறிப்பாக ஈரான் தலைவராக அயத்துல்லா அலி காமேனி பதவியேற்ற பின்பு அவர் இந்தியா வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.