Colombia: Powerful earthquake; registered at 7.4 on the Richter scale google
உலகம்

கொலம்பியா : சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவு : 132 பேர் பலி, மீட்பு பணிகள் தீவிரம்..!

கொலம்பியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 132 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 570 பேர் காயமடைந்துள்ளனர்.

Rohini

கொலம்பியா : சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமானது ஏற்ப்பட்டுள்ளது , இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கதால் இதுவரை 132 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் பொகோட்டாவிலிருந்து சுமார் 150 மைல் தொலைவில் அமைந்திருந்ததுடன், பொகோட்டாவிலும் இதன் அதிர்வு கடுமையாக உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ரிக்டர் அளவு கோலில் 7.4 ஆக பதிவு

சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 132 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 570 பேர் காயமடைந்துள்ளனர். கொலம்பியாவின் மேற்கே சான் ஜோஸ் டெல் பால்மரில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது

பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் , பேரிடர் மீட்பு குழு

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலிஅயில் மக்கள் , வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர் , குறிப்பாக இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அவசரகால மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில்,

கொலம்பியாவில் உள்ள காலி நகரில் உள்ள மருத்துவமனையின் குழந்தைகள் மற்றும் பச்சிளங்குழந்தைகள் பிரிவுக் கட்டிடங்களும் இடிந்து விழுந்திருக்கும் சூழலில் நிலைமையைக் கட்டுப்படுத்த அரசு தேசிய பேரிடரைப் பிரகடனப்படுத்தி, அப்பகுதியில் ராணுவ வீரர்களைக் களமிறக்கியுள்ளது கொலம்பிய அரசு

நிலநடுக்கம் குறித்து கொலம்பியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை தீவிர உதவிகளை வழங்கி வருகிறது' என தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் கொலம்பியாவுக்கு சுற்றுலா செல்வதுடன், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் பெரும்பான்மையானவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

============================