நீடித்து வரும் போர்
Iran Attack on Dubai Hotel : தொடர்ந்து நீடித்து வரும் ஈரான் இஸ்ரேல் அமெரிக்க போரால் வளைகுடா நாடுகளில் பதற்றமான நிலையானது நிலவி வருகிறது. மேலு துபாய் விமனநிலையங்கள் மீது ஈரான் தொடர்ந்து ட்ரோன் தாக்குதலையும் நடத்தி வருகிறது .
விமான சேவையிலும் பாதிப்பு
வளைகுடா நாடுகளில் நீடித்து வரும் போர் பதற்ற நிலையால் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் விமானங்களின் சேவையில் கடுமையான பாதிப்பானது ஏற்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை மூடல் எதிரொலி
ஈரான் இஸ்ரேல் அமெரிக்கா போர் பதற்றம் காரணமாக முக்கிய கப்பலை வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் அன்றாட உணவு வாழ்க்கைச் செலவுகள் அதிகரிக்கும் என ஐநா ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது
மேலும் படிக்க :இந்தியாவிற்கு 95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் : அனுப்ப காத்திருக்கும் ரஷ்யா!
ஓட்டல்கள்களில் சலுகை அறிவிப்பு
போர் பாதிப்பால் வாடிக்கையாளர்கள் வருகை குறைந்த நிலையில் நட்சத்திர ஓட்டல்கள் பெரும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் துபாயில் உள்ள "ஃபோர் சீசன்ஸ்" நட்சத்திர ஓட்டல் நாளொன்றுக்கு இந்திய ரூபாயில் ரூ. 16,000 வரை சலுகை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது