Powerful earthquake in Japan: Registered 7.1 on the Richter scale. google
உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு : 13 பேர் பலி : சுனாமி எச்சரிக்கை விடுப்பு..!

ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Rohini

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் கியூஷ பகுதியில் ஏற்ப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமானது ஏற்ப்பட்டுள்ளது , இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. கியூஷ பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து குமாமோட்டோ, நாகசாகி, ககோஷிமா, சாகா, மியாசாகி, ஃபுக்குவோக்கா, ஒயிட்டா பகுதிகளுக்கு நிலநடுக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

13 பேர் உயிரிழப்பு

ஜப்பானின் குயுஷ தீவின் குமாமோட்டோ பகுதியில் ஏற்ப்பட்ட நிலநடுக்கம் , சக்திவாய்ந்ததாக 7.1 ஆக் ரிக்டர் அள்வுகோலில் பதிவாகியுள்ளது

ஜப்பானில் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு பிரதமர் தகாய்ச்சி தெரிவித்துள்ளார். ற்று 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதிகளுக்கு, சுனாமி எச்சரிக்கை விடுப்பு

மோடோ, நாகசாகி, ககோஷிமா, ஃபுகுஓகா, சாகா, ஒய்டா, மியாசகி உள்ளிட்ட ஜப்பான் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மேற்கண்ட மாகாணங்களுக்கு அவசர எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது

நிலநடுக்கம் குறித்து ஜப்பான் புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளதாவது

ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியிலுள்ள முக்கிய தீவான கியூஷுவில் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் மையப் பகுதியானது, கடலில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்ததாக ஜப்பான் புவியியல் ஆய்வு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

மக்கள் பாதுக்காப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடல் அலைகள் 1 மீட்டர் அல்லது 3.28 அடி உயரத்துக்கு எழுமென்றும், கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே கியூஷு தீவை ஒட்டிய சில பகுதிகளில் ஏற்கனவே சுனாமி அலைகள் எழ தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை உடனடி உயிரிழப்புகளோ அல்லது மிக மோசமான சேதங்களோ ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

=========================