தொடரும் இயற்கை பேரழிவு :
இமயமலைத் தொடரின் மடியில் அமைந்துள்ள நேபாளம், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பேரிடர்களை சந்தித்து வருகிறது.
பருவமழை தீவிரம், காலநிலை மாற்றம் மற்றும் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவது போன்ற காரணங்களால் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்புகளும் பொருளாதார இழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக 2026-ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளம், கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2021: மெலம்சியை புரட்டிப்போட்ட வெள்ளம் :
2021-ஆம் ஆண்டு கனமழை மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக நேபாளத்தின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மெலம்சி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் 133-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பல வீடுகள், சாலைகள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகள் சேதமடைந்தன.
2022: பருவமழையால் மீண்டும் பாதிப்பு :
2022-ஆம் ஆண்டிலும் பருவமழை நேபாள மக்களுக்கு பெரும் சவாலாக அமைந்தது.
பல மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது
2023: ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு :
2023-ஆம் ஆண்டு பருவமழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பல உயிர்களை பறித்தன.
அதிகாரப்பூர்வ தகவல்களின்படி 5,900-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.
விவசாய நிலங்கள் மற்றும் கிராமப்புற சாலைகள் கடுமையாக சேதமடைந்தன.
2024: வரலாறு காணாத மழை :
2024-ஆம் ஆண்டு செப்டம்பரில் பெய்த கனமழை நேபாளத்தின் சமீபகால வரலாற்றிலேயே மிக மோசமான வெள்ளங்களில் ஒன்றாக பதிவானது.
246-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 21 மாவட்டங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டதுடன், சுமார் 29 லட்சம் மக்கள் வெள்ளத்தின் தாக்கத்தை சந்தித்தனர்.
2025: எல்லைப்பாலத்தை அடித்துச் சென்ற வெள்ளம் :
2025-ஆம் ஆண்டு ரசுவாகடி பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம், நேபாளம் மற்றும் சீனாவை இணைக்கும் முக்கிய எல்லைப்பாலத்தை அடித்துச் சென்றது.
இதனால் வர்த்தகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
2026: 5 ஆண்டுகளில் மிக மோசமான பேரழிவு
2026-ஆம் ஆண்டு ஏற்பட்டுள்ள தற்போதைய வெள்ளம், கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகக் கடுமையான பேரழிவாகக் கருதப்படுகிறது. 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும், பல கிராமங்கள் முற்றிலும் அழிவடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.