

இந்தியாவின் தங்க மகன் :
இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரும், ஒலிம்பிக் பதக்க நாயகனுமான நீரஜ் சோப்ரா, கணுக்காலில் ஏற்பட்ட தசைநார் (Ligament) கிழிவு காரணமாக 2026 சீசனின் மீதமுள்ள அனைத்து போட்டிகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
டைமோண்ட் லகுக்கே போட்டியில் சிறப்பான ஆட்டம் :
சமீபத்தில் நடைபெற்ற டயமண்ட் லீக் தொடரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்த நீரஜ் சோப்ரா, தனது உடற்தகுதியை மீண்டும் முழுமையாக பெற்றுவிட்டதாக நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
ஆனால் பயிற்சியின்போது ஏற்பட்ட கணுக்கால் காயம் மருத்துவ பரிசோதனையில் தசைநார் கிழிவாக உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மருத்துவர்கள் ஆலோசனை :
காயம் குறித்து மருத்துவர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் ஆலோசனை நடத்திய நீரஜ் சோப்ரா, முழுமையான குணமடைவதற்காக ஓய்வு எடுப்பதே சிறந்த முடிவு என தீர்மானித்துள்ளார்.
இதனால் இந்த சீசனின் மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்காமல் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பயிற்சிகளில் கவனம் செலுத்த உள்ளார்.
இந்திய அணிக்கு பின்னடைவு :
வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் முக்கிய பதக்க நம்பிக்கையாக நீரஜ் சோப்ரா கருதப்பட்டார். அவரது விலகல் இந்திய தடகள அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் தங்கப் பதக்க வாய்ப்பில் இது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என விளையாட்டு வட்டாரங்கள் கருதுகின்றன.
ரசிகர்களுக்கு ஏமாற்றம் :
நீரஜ் சோப்ராவின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், முழுமையாக குணமடைந்து மீண்டும் வலுவாக களமிறங்குவேன் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பலரும் அவருக்கு விரைவில் குணமடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மீண்டும் வலுவான வருகைக்கு தயாராகும் நீரஜ் :
சர்வதேச தடகள அரங்கில் இந்தியாவுக்கு பல பெருமைகளை பெற்றுத்தந்த நீரஜ் சோப்ரா, தற்போது தனது உடல்நலனில் முழு கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.
காயத்திலிருந்து விரைவில் மீண்டு, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள முக்கிய சர்வதேச போட்டிகளில் மீண்டும் இந்தியாவுக்காக பதக்கங்களை வெல்லும் நோக்கத்துடன் அவர் தயாராகி வருகிறார்.
===============