

இந்திய விண்வெளித் துறையின் புதிய சாதனை :
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது அடுத்த முக்கிய விண்வெளி திட்டமாக EOS-05 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை செப்டம்பர் 4 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தத் தயாராகியுள்ளது.
GSLV-F17 ராக்கெட் மூலம் ஏவப்படவுள்ள இந்த செயற்கைக்கோள், பூமியின் பல்வேறு மாற்றங்களை துல்லியமாக கண்காணிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
வானிலை மற்றும் பேரிடர் கண்காணிப்புக்கு உதவும் :
EOS-05 செயற்கைக்கோள் மூலம் வானிலை மாற்றங்கள், புயல் உருவாக்கம், கனமழை, வெள்ள அபாயங்கள் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே கண்காணிக்க முடியும்.
இதன் மூலம் பேரிடர் எச்சரிக்கை அமைப்புகளை மேலும் வலுப்படுத்தி, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
விவசாயத் துறைக்கு புதிய வாய்ப்பு :
இந்த செயற்கைக்கோள் வழங்கும் உயர்தர படங்கள் மூலம் விவசாய நிலங்களின் நிலை, பயிர் வளர்ச்சி, நீர்வள பயன்பாடு மற்றும் நில மாற்றங்களை ஆய்வு செய்ய முடியும்.
இதனால் விவசாயிகளுக்கும், அரசின் திட்டமிடலுக்கும் துல்லியமான தகவல்கள் கிடைக்கும்.
இந்தியாவின் விண்வெளி திறனை வலுப்படுத்தும் திட்டம் :
சமீப ஆண்டுகளில் சந்திரயான், ஆதித்யா-எல்1 போன்ற திட்டங்களின் வெற்றியைத் தொடர்ந்து, EOS-05 ஏவுதலும் இந்தியாவின் விண்வெளி திறனை உலக அரங்கில் மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம் மூலம் பூமி கண்காணிப்பு துறையில் இந்தியா புதிய உயரத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு மக்கள் ஆர்வம் :
இந்த செயற்கைகோள் ஏவும் சேதியை அறிந்து பொதுமக்கள் மிக ஆர்வமாக உற்று நோக்கி கொண்டுள்ளனர்.
எனவே இதனை காண நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் சிறுவர்களும் மிக ஆர்வமாக உள்ளனர்.இது இந்தியாவை தவிர தவிர மற்ற நாடுகளும் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.