

A profile of the work of Jyoti Aher, a 'female wireman' working in the field for Maharashtra's Mahavitaran electricity utility.
17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பர் 17 அன்று காலை 7:40 மணி முதல் 8:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
2009 ஏப்ரலுக்குப் பின் நடைபெறவிருந்த இந்நிகழ்வு, 2018 வீரவசந்தராயர் மண்டபத் தீ விபத்து, கொரோனா ஊரடங்கு மற்றும் கற்கள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் தள்ளிப்போனது.
திருப்பணிகள் மற்றும் நிதி விவரம்
தி.மு.க. ஆட்சியில் சீரமைப்பு மற்றும் திருப்பணிகள் தொடங்கப்பட்டு, கோவில் நிதி ரூ.15.81 கோடி, உபயதாரர் நிதி ரூ.5.16 கோடி என மொத்தம் ரூ.32.28 கோடியில் பணிகள் நடைபெற்றன. உபயதாரர்கள் மூலம் ரூ.21 கோடி பெறப்பட்டுள்ளது.
தொடக்கப் பூஜைகள் மற்றும் புனித நீர் எடுத்தல்
செப்டம்பர் 6 காலை 7:00 மணிக்குக் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்குகின்றன. செப்டம்பர் 7-ல் நவகிரக யாகவேள்வி, 8-ல் வாஸ்து சாந்தி, 9-ல் வைகையிலிருந்து புனித நீர் மற்றும் மண் எடுத்தல், 10-ல் பேரொளி வழிபாடு மற்றும் முளைப்பாரி இடுதல் ஆகியவை நடைபெறும்.
யாகசாலை பூஜைகள்
செப்டம்பர் 11 மாலை முதல் 17 வரை மொத்தம் 12 கால யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன.
மகா கும்பாபிஷேக நேரம்
செப்டம்பர் 17 காலை 7:40 மணிக்குத் தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்கும், 7:55 மணிக்கு அம்மன் மூலஸ்தானத்திற்கும், 8:10 மணிக்குச் சுந்தரேஸ்வரர் மூலஸ்தானத்திற்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: ”கும்மிடிப்பூண்டி-கூடூர் இடையே 3, 4வது புதிய ரயில் பாதைகள்” : ரூ.2,229 கோடி ஒதுக்கீடு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்...!
=====