

தமிழ்நாடு பட்ஜெட் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கிய நிலையில், சட்டப்பேரவையின் முதல்நாளில் பொது பட்ஜெட்டும், இரண்டாவது நாளான ஆகஸ்ட் 6-ம் தேதி வேளண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன.
சட்டமன்றத்தில் விசிக MLA கோரிக்கை :
இதில் பேசிய காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஜோதி மணி தான் நீண்டதூரத்தில் இருந்து சட்டமன்றத்துக்கு வருவதாகவும் அதுமட்டுமல்லாமல் அவரிடம் கார் எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார் கூடவே அவர் இங்கு இருக்கக்கூடிய பலர் முதன் முறை சட்டமன்ற உறுப்பினர் ஆகியுள்ளதால் அவர்களுக்கும் இந்த அரசாங்கம் கார் வசதி மற்றும் உதவியாளர் போன்ற சலுகைகளை தர வேண்டும் எனவும் அவர் பேசி இருந்தார் .
முதலமைச்சர் பரிசீலிப்பதாக தகவல்:
தொடர்ந்து பேசிய அவர், காலணி அணியாத எம்.எல்.ஏ-க்கள் கூட இருப்பதாகவும், ஊழல் இல்லாத அரசு அமையவும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உதவிடும் வகையிலும் வாகன வசதி செய்து தர வேண்டும் என முதல்வர் விஜயிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
அப்போது பேசிய சபாநாயகர் ஜேடிசி பிரபாகர், முதல்வரின் கரங்கள் அள்ளிக் கொடுக்கும் கரங்கள் எனப் புகாரம் தெரிவித்ததுடன், முதலமைச்சர் விஜய் உரிய நடவடிக்கை எடுப்பார் எனவும் தெரிவித்தார்.
வரும்வாரங்களில் அதிகாரப்பூரவ தகவல் வரும் என எதிர்பார்ப்பு :
வருகின்ற வாரத்தில் சட்டமன்றத்தில் இந்த கோரிக்கைக்கு முதலவர் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடுவார் எனவும் ,அப்படி அறிவிப்பானது வெளி வந்தால் அது முதல்முறை சட்டமன்ற உறுப்பினரானவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என கூறலாம்.