கம்​யூனிஸ்​டு​களுக்கு தேவை உண்​டியல்​கள் அல்ல, பெரிய பெட்​டிகள்

Tamilisai Soundararajan : கம்​யூனிஸ்​டு​களுக்கு இப்​போது உண்​டியல்​கள் தேவை​யில்​லை. பெரிய பெட்​டிகள் தான் தேவைப்​படு​கின்​றன என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
Tamilisai Soundararajan Condemns Communist Party in Tamil Nadu
Tamilisai Soundararajan Condemns Communist Party in Tamil Nadu
1 min read

Tamilisai Soundararajan : தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது: திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் குழந்​தையை பாலியல் வன்​கொடுமை செய்​தவர் குறித்த சிசிடிவி காட்​சிகள் கிடைத்து 5 நாட்​கள் ஆகி​யும், இன்​னும் பிடிப்​ப​தற்கு நடவடிக்கை எடுக்​க​வில்​லை.

தமிழகத்​தில் என்ன நடந்து கொண்டு இருக்​கிறது என்​ப​தை, யோசித்​தால் அனை​வருக்​கும் வேதனை​யாக இருக்​கிறது. எதை​யும் கண்​டு​கொள்​ளாத தமிழக முதல்​வர் ஸ்டாலின், மக்​களு​டைய வீடு​களுக்கு செல்​லுங்​கள். அவர்​களை கட்சி உறுப்​பினர்​கள் ஆக்​குங்​கள். பாஜக, அதி​முக பற்றி அவர்​களிடம் பேசுங்​கள் என்று கூறு​வது வேதனை அளிப்​ப​தாக இருக்​கிறது.

முதல்​வரின் ஒரே நோக்​கம் வரும் தேர்​தலில் 30 சதவீத வாக்​கு​களை பெறு​வது தான். திமுக​வினர் 10 நிமிடங்​கள் ஒவ்​வொரு வீட்​டிலும் போய் பேசும்​போது, மக்​கள் கேள்வி​கள் கேட்க வேண்​டும். அஜித்​கு​மாருக்கு என்ன ஆனது ? அண்ணா பல்​கலைக்​கழகத்​தில் என்ன நடந்​தது. திரு​வள்​ளூரில் குழந்​தைக்கு நடந்​தது என்ன ? மருத்​து​வ​மனை​களில் குழந்​தைகளை தரை​யில் படுக்க வைத்​துள்​ளது ஏன் ? மருத்​து​வர்​கள் இல்​லாமல் இயங்​கும் அரசு மருத்​து​வ​மனை​கள் ஏன் ? ஆசிரியர்​கள், அரசு ஊழியர்​கள் சாலை​யில் இறங்கி போராடு​வது ஏன் ? என்ற கேள்வி​களை, திமுக​வினரிடம் மக்​கள் கேட்க வேண்​டும்.

திருச்சி சிவா காம​ராஜர்(Trichy Siva About Kamarajar) பற்றி பேசி​யதை தவறு என்று முதல்​வர் கூற​வில்​லை. இதை இன்​றோடு விட்டு விடுங்​கள் என்று கூறுகின்​றார். பாஜகவைச் சேர்ந்த யாராவது இப்படிபேசி இருந்​தால் நீங்​கள் என்ன சொல்லி இருப்​பீர்​கள். எந்த அளவு குதித்து இருப்​பீர்​கள்.

மேலும் படிக்க : காவல்நிலைய மரணம், மவுனம் எதற்காக? : திமுக மீது தமிழிசை பாய்ச்சல்

கூட்​டணி கட்சி என்​ப​தால், செல்​வப்​பெருந்​தகை​யும் மவுனம் சாதிக்​கிறார். காம​ராஜரை நாங்​கள் காங்​கிரஸ்​கார​ராக பார்க்​க​வில்​லை. அவர் குழந்​தைகளுக்கு கல்வி கண் திறந்​தவர். நல்​லாட்சி நடத்​தி​ய​வர். பிரதமர் மோடி பேசும் போது, நல்​லாட்​சிக்கு காம​ராஜரின் ஆட்​சியை உதா​ரணம் காட்டி பேசுகிறார். அந்த அளவு காம​ராஜர் மீது பாஜக மதிப்பு மரி​யாதை வைத்​துள்​ளது.

கம்​யூனிஸ்​டு​களுக்கு இப்​போது உண்​டியல்​கள் தேவை​யில்​லை. பெரிய பெட்​டிகள் தான் தேவைப்​படு​கின்​றன. ஆட்​சி​யில் பங்கு வேண்​டும் என்று திமுக கூட்​ட​ணி​யில் உள்ள செல்​வப்​பெருந்​தகை​யும், கார்த்​திக் சிதம்​பரம் பேசத் தொடங்கி விட்​டனர். இதனால் தி​முக கூட்​டணியிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்​வாறு தமிழிசை சௌந்தரராஜன்(Tamilisai Soundararajan) தெரி​வித்​தார்​.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in