சென்னை வானிலை ஆய்வு மையம் இதுபற்றி வெளியிட்டுள்ள தகவலில்,
தமிழகத்தில் வானிலை நிலவரம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள வானிலை மையம்
தமிழகத்தின் ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும்
செங்கல்பட்டு, சென்னை, கடலூர், தருமபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ஆகிய பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது
லேசான மழை பெறும் மாவட்டங்கள்
அதன்படி விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரியில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்" என்று சென்னை வானிலை மையம் தெரிவித்டுள்ளது
சென்னையில் இதமான சூழல்
சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக வெய்யில் வாட்டி வதைத்த நிலையில் இன்று பலத்த காற்று வீசியது. வெப்பம் குறைந்து மிதமான சூழல் நிலவுவது குறிப்பிடத்தக்கது.
வாட்டி வதைத்த வெயில்
கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது , குறிப்பாக உலகளவில் வெயில் தாக்கம் அதிகம் ஏற்படும் பத்து இடங்களும் இந்தியாவில் தான் அமைந்திருக்கிறது. குறிப்பாக உபியில் பண்டா நகரம் அதிக வெப்பநிலை பெற்றிருக்கிறது.
========================