காங்கிரஸில் இணைந்த தமிழ்க்குமரன்
பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் கடந்த வாரம் டெல்லி சென்று காங்கிரஸ் கட்சியில் தன்னை இதனால், அதிர்ச்சி அடைந்த ராமதாஸ், தமிழ்க்குமரனை பாமக-வில் இருந்து நீக்குவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
இணைந்த ஒரே வாரத்தில் ,கட்சியில் சீட்
காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஒரே வாரத்தில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரனுக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு சீட் வழங்கப்பட்டுள்ளது .
அதன்படி காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலில் தமிழ்க்குமரனுக்கு பென்னாகரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. கட்சியில் இணைந்த ஒரே வாரத்துக்குள் தமிழ்க்குமரனுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்தது, காங்கிரஸ் கட்சியில் பெரும் விவாதப்பொருளாகியுள்ளது.
மகனுக்கு எதிராக ,போட்டியிடப்போவதில்லை
ராமதாஸ் ஆதரவாளராகவும், தற்போது பென்னாகரம் எம்எல்ஏ-வாகவும் இருக்கும் ஜி.கே.மணி, ராமதாஸே சொன்னாலும், இந்த முறை பென்னாகரம் தொகுதியில் மகனுக்கு எதிராக போட்டியிடப் போவதில்லை என்ற முடிவை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ராமதாஸ் கட்சியில் இருப்பது உதவாத காரியம்
பாமக அன்புமணி கட்டுப்பாட்டில் சென்றுவிட்டது , ராமதாஸ் கூட இருந்தால் ஒன்றும் நடக்காது என்பது ஜி.கே.மணிக்கு தெரியும், எனவே தான் மகனின் அரசியல் வாழ்வை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சியில் தன மகன் இணைத்தார் என்றும் குறிப்பிட்டுளளார் .
மேலும் பென்னாகரம் தொகுதியில் மகனை எதிர்த்து ஜி.கே.மணி போட்டியிடப்போவதில்லை. ராமதாஸும் பென்னாகரம் தொகுதிக்கு வேட்பாளரை அறிவிக்க வாய்ப்பு இல்லை என்றும், தெரிகிறது
=======