மேகேதாட்டுவில் அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாகும்;காவிரி விவகாரத்தில் புதிய நீதிமன்றம் எதற்கு ? ; எடப்பாடி பழனிச்சாமி

காவிரியில் நீர் திறப்பு குறித்து முதல்வர் விஜய் கர்நாடகவுடனான பேச்சுவார்த்தையை நிறுத்த வேண்டும் என அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்
If a dam is built at Mekedatu, Tamil Nadu will turn into a desert;edapadi palanisamy
If a dam is built at Mekedatu, Tamil Nadu will turn into a desert;edapadi palanisamy google
1 min read

மேகேதாட்டு விவகாரம் ;கர்நாடகவுடனான பேச்சை தமிழக முதல்வர் நிறுத்த வேண்டும்

மேகேதாட்டு குறுக்கே அணை கட்டும் விவகாரத்தில் , கர்நாடக் முதல்வருடனான பேச்சை நிருத்திக்கொள்ள வேண்டும் என்றும் , நேரில் சென்று விவாதங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் ,

குறிப்பாக கர்நாடக சென்று மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக பேச இருப்பதாக குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன முதல்வர் விஜய் கைவிட வேண்டும் என்று டெய்தியாளரகள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்

கர்நாடகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் தீர்வு கிடைக்காது , எடப்பாடி

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தொடர்ந்து நாம் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை தீர்வுக்கு வழி வகுக்காது என்றும் அதிமுக பொதுசெயலாளர் எட்ப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்

மேகேதாட்டு விவாகரம் , புதிய நீதிமன்றம் தேவையில்லாத ஒன்று

அதிமுக ஆட்சியில் பல்வேறு தீர்ப்புகள் மூலம் தண்ணீர் பெற்றுத்தந்துள்ளோம் ஆனால் , மேகதாது விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் என்ற ஒன்று தேவையில்லை,ஏற்கனவே காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளது. கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் இரு மாநில உறவுகளை சிதைக்கும் வகையில் பேசி வருகிறார். டி.கே.சிவக்குமாரின் பேச்சு கண்டிகத்தக்கது என்று தெரிவித்துள்ளார்

விரிவான கருத்திற்கு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்

மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாகிவிடும். உணர்வுப்பூர்வமான விவாதங்களில் விரிவான கருத்து பரிமாற்றம் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். இதே கருத்தை பல அரசியல் தலைவர்களும் கூறி வரும் நிலையில், முதல்-அமைச்சர் விஜய் இன்னும் வாய் திறக்கவில்லை.

மேகேதாட்டு அணை குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக விரிவான விவாதம் மேற்கொள்வது அவசியம் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்

கர்நாடகவிற்கு வர வேண்டாம் ; முதல்வர் சிவக்குமார்

காவிரி மேலாண்மை கூட்டத்தில் 3,500 கன் அடி விதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கும் நிலையில், இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாகவும் ,

மேலும் இங்கு அசாதரண சூழல் நிலவுவதால் தற்போதைக்கு முதல்வர் விஜய் இங்கு வர வேண்டாம் என்று தெரிவித்திருக்கும் நிலையில் ,மேகேதாட்டு பிரச்சனையில் தமிழக அரசு அடுத்து எத்தகையாக சாவல்களை மேற்கொள்ளப்பேகிறது என்றும், இது குறித்து முதல்வர் வாய் திறந்து பேச வேண்டு என்று தெரிவித்துள்ளார்.

=======================

logo
Thamizh Alai
www.thamizhalai.in