Jallikattu: களைகட்டும் ஜல்லிக்கட்டு 2026 ஆரம்பம் முதல் முடிவு வரை!

Jallikattu 2026 Pongal in Tamil Nadu : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டு திருவிழா, இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெகு விமர்சையாக தொடங்கியது.
Pongal Jallikattu 2026 event Begins in Tamil Nadu, from its beginning to end full details of Jallikattu 2026 date and Time in Tamil
Pongal Jallikattu 2026 event Begins in Tamil Nadu, from its beginning to end full details of Jallikattu 2026 date and Time in TamilGoogle
2 min read

2026 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு தொடக்கம்

Jallikattu 2026 Pongal in Tamil Nadu : 2026-ஆம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஜனவரி மாதத்துடன் தமிழகமெங்கும் பாரம்பரிய உற்சாகத்துடன் தொடங்கியுள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் இந்த வீர விளையாட்டில், புதுக்கோட்டை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் முக்கிய மையங்களாக விளங்குகின்றன.

தமிழர் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் கால்நடை வளர்ப்பின் அடையாளமாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டு, இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மற்றும் வீரர்களின் பங்கேற்புடன் நடைபெற்று வருகிறது.

2026 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பம்

2026-ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 3-ஆம் தேதி(Tamil Nadu's first jallikattu of 2026 to be held at Thatchankurichi on January 3) வெற்றிகரமாக நடைபெற்றது. இதன் மூலம் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு தொடர் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமானது. புதுக்கோட்டை மாவட்டம், அதிக எண்ணிக்கையிலான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் மாவட்டமாக தொடர்ந்து திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை இணைந்து பாதுகாப்பு, மருத்துவ வசதிகள் மற்றும் பார்வையாளர்களுக்கான அடிப்படை வசதிகளை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தன.

மதுரையில் ஆரம்பமாகும் ஜல்லிக்கட்டு

இதைத்தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்குப் பெயர் பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. அவனியாபுரத்தில் ஜனவரி 15-ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதேபோல், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரிலும் காளைகள் பதிவு, வீரர்களின் மருத்துவ பரிசோதனை, பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த மூன்று இடங்களும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஜல்லிக்கட்டு தளங்களாக இருந்து, ஆண்டுதோறும் நாடு முழுவதிலிருந்தும் பார்வையாளர்களை ஈர்த்து வருகின்றன.

2026-ல் களைகட்டும் ஜல்லிக்கட்டு

இந்நிலையில், முதன்முறையாக திருச்சி மாவட்டம் பெரிய சூரியூரில் ஜனவரி 15, 2026 அன்று புதிய நிரந்தர ஜல்லிக்கட்டு மைதானம் திறக்கப்படவுள்ளது. இது முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது. நிரந்தர மைதானம் அமைக்கப்பட்டதன் மூலம், பாதுகாப்பு அம்சங்கள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வீரர்கள், காளைகள் மற்றும் பார்வையாளர்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட சூழல் உருவாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது எதிர்காலத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், 2026-ஆம் ஆண்டின் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தமிழர்களின் பாரம்பரிய பெருமையை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்று வருகின்றன.

தமிழக பண்பாட்டை எடுத்துசொல்லும் அடையாளம் ஜல்லிக்கட்டு

இதைத்தொடர்ந்து, அரசின் வழிகாட்டுதலின்படி, மனிதநேயமும், கால்நடை நலனும் பேணப்படுவதை உறுதி செய்யும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிராமப்புற பொருளாதாரம், சுற்றுலா மற்றும் பாரம்பரிய கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் இந்த ஜல்லிக்கட்டு விழாக்கள், தமிழகத்தின் பண்பாட்டு அடையாளத்தை உலகிற்கு மீண்டும் எடுத்துச் சொல்லும் நிகழ்வுகளாக அமைந்துள்ளது என்பது தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் மார்தட்டி சொல்லும் உரித்தான ஒன்றாகும்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in