

திட்டத்தை அமைச்சர் தொடங்கிவைத்தார் :
ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தை அமைச்சர்கள் பி.வெங்கட ரமணன் மற்றும் வ.காந்திராஜ் ஆகியோர் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனர்.
தென்மேற்கு பருவமழை குறைவாக உள்ள நிலையில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் வெங்காயம் விலை அதிகரித்து வருகிறது.
இதையடுத்து தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு மூலமாக ஆயிரம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பங்கு :
மத்திய அரசு சார்பாக மகாராஷ்டிரத்தின் நாசிக் வெங்காய குடோனில் இருந்து பல மாநிலங்களுக்கு வெங்காயத்தை டன் கணக்கில் அனுப்பி வருகிறது.
இதன் மூலம் வெங்காயத்தை விலையை குறைத்து ஒரு கிலோ ரூ. 35-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நியாய விலைக்கடைகளில் விற்பனை :
இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் குறைந்த விலையில் வெங்காயத்தை விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அந்த வகையில், முதற்கட்டமாக நகர்ப்புறத்தில் அமைந்துள்ள 8,233 நியாய விலைக் கடைகள் மூலம் 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வெங்காயம் வழங்கப்படவுள்ளது.
பொதுமக்கள் வரவேற்பு:
ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்யும் அரசின் முடிவுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அத்தியாவசிய சமையல் பொருளான வெங்காயம் குறைந்த விலையில் கிடைப்பது குடும்பங்களின் செலவைக் குறைக்க உதவும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
============