அதிகரிக்கும் காவல் மரணங்கள்
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் காவல் மரணங்கள் என்பது தொடர்கதையான ஒன்றாகவே இருந்து வருகிறது. குறிப்பாக தமிழக வெற்றி கழகம் பொறுப்பேற்ற பிறகு மூன்றிக்கும் மேற்ப்பட்ட காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவில் , காவல் மரணங்கள் அதிகம் நிகழும் இடமாக தமிழகம் இருந்து வருகிறது.
தூத்துக்குடி இளைஞர் உயிரிழப்பு
தூத்துக்குடியில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் காவல் மரணங்கள் தொடர் கதையாகி வருவதாக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் , சபரிவர்மன் என்பவர் காவல் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில் , சிறையில் மரணமடைந்த விவகாரத்தில் 3 பேர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட்ருக்கும் நிலையில் போலீசார் மருத்துவ பரிசோதனை நடத்தி சிறையில் அடைத்த கைதியை வார்டன்கள் அடித்தே கொன்றதாக புகார் அளிக்கப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது
தொடரும் காவல் மரணங்களுக்கு அரசியல் தலைவர்கள் கணடனம்
திமுக தலைவர் ஸ்டாலின்
தூத்துக்குடி இளைஞர் காவல் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட விவகாரத்தில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அருணாச்சலம், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது.
போலீஸார் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்து சொன்னதைப் பார்க்கும்போது நெஞ்சம் கலங்குகிறது.
காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்கின்றன.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: தூத்துக்குடியில் இளைஞர் அருணாச்சலம் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தவெக ஆட்சி அமைந்த குறுகிய காலத்திலேயே காவல் மரணங்கள் தொடர்கதையாக மாறிவிட்டன.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல் அதிகாரிகள், சட்டத்தை தன் கையில் எடுத்து காவல் மரணங்களை ஏற்படுத்துவது எந்த வகையில் நியாயம்? முதல்வர் இவ்விவகாரத்தில் தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்
திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளதாவது
நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்ரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது.
காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் உட்பட பல அமைச்சர்களும், அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதால், தமிழகத்தில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா? என்பதே சந்தேகம்தான் என்றும் தெரிவித்திருக்கிறார்
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் காவலில் அருணாச்சலம் என்ற இளைஞர் உயிரிழந்திருப்பது கண்டனத்துக்குரியது. இந்த தாக்குதல் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்
பாமக தலைவர் அன்புமணி
ஏற்கெனவே நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதி சிறைத்துறையினரால் தாக்கி கொல்லப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் பதற்றம் தீரும் முன்பே இன்னொரு விசாரணை கைதி மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இந்த உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்
உரிய தீர்வு காணப்படுமா
தமிழக்த்தில் தொடரும் இந்த காவல் மரணங்களுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை நீதித் துறையும் அரசும் உறுதிசெய்வதுடன், கைதுசெய்யப்படும் நபரின் பாது காப்புக்கும் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும்.
==============================