புறநகர் ரயில்கள் ரத்து எதிரொலி : கூடுதலாக 50 பேருந்துகள், போக்குவரத்து கழகம் நடவடிக்கை!

எழும்​பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரண​மாக புற நகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் ராயபுரம் டூ கிளாம்பாக்கம் வரை கூடுதல் 50 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
Suburban train cancellations echo, Transport Corporation announces additional bus operations Royapuram to Kilambakkam
Suburban train cancellations echo, Transport Corporation announces additional bus operations Royapuram to Kilambakkamgoogle
1 min read

கூடுதல் பேருந்துகள் இயக்கம்

Royapuram to Kilambakkam Bus : எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக வரும் பிப்ரவரி 20 -ம் தேதி முதல் ஏப்ரல் 5 -ம் தேதிவரை சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டும் குறித்த எண்ணிக்கையிலான ரயில்களின் இயக்கத்தினாலும் ராயபுரம் டூ கிளாம்பாக்கம் வரை 50 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது .

ஏற்கனவே இயக்கப்படும் பேருந்துகளின் விவரம்

ஏற்கனே ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து தாம்பரம் கிளாம்பாக்கம் வழியாக கூடுவாஞ்சேரிவரை தடம் எண் E18-ல் 16 பேருந்துகளும், கிளாம்பாக்கம் வரை தடம் எண் 18 A -ல் 28 பேருந்துகள் என மொத்தமாக 44 பேருந்துகளும் இதுவரை இயக்கப்பட்டு வருகின்றன.

இதே வழி தடத்தில் கூடுதல் 50 பேருந்துகள் இயக்கம்

புறநகர் ரயில்களின் ரத்து அறிவிப்பை அடுத்து மக்களின் சிரமத்தை குறைக்கவும் ,எளிதில் பயணத்தை மேற்கொள்ளவும் பிப்ரவரி 20 -ம் தேதி முதல் ஏப்ரல் 5 -ம் தேதிவரை ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து 35 பேருந்துகள் கிளாம்பாக்கம் வரையும் , பல்லாவரத்திலிருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை 15 பேருந்துகள் என மொத்தம் 50 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது .

தேவைக்கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை

மக்களின் தேவைக்கேற்ப கூடுதலாக அதே வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது .

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in