நேபாளத்தில் உள்ள தமிழக மக்களின் நிலை என்ன? வெளியுறவுத் துறை செயலருடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை...

நேபாளத்தில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையைத் தொடர்ந்து, அங்கு உள்ள தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து தில்லியில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது...
Special Measures to Monitor Tamils in Nepal: Tamil Nadu Ministers Hold Talks with Central Officials
Special Measures to Monitor Tamils in Nepal: Tamil Nadu Ministers Hold Talks with Central OfficialsGoogle
1 min read

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் :

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அவசர நிலைமையை தொடர்ந்து, அங்கு வசிக்கும் மற்றும் பயணம் மேற்கொண்டுள்ள தமிழகத்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசுடன் தமிழக அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இயற்கைப் பேரிடர் மற்றும் அதனைத் தொடர்ந்து உருவாகியுள்ள அவசர சூழ்நிலை காரணமாக, அங்கு உள்ள தமிழகத்தவர்களின் பாதுகாப்பு குறித்து தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

வெளியுறவுத்துறை செயலாளருடன் சந்திப்பு :

இதன் ஒரு பகுதியாக, தமிழக அமைச்சர்கள் தில்லியில் மத்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளை சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்த சந்திப்பின் போது, நேபாளத்தில் வசித்து வரும் தமிழர்கள், கல்வி பயிலும் மாணவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் தொழில் காரணமாக தங்கியுள்ளவர்களின் தற்போதைய நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிறப்பு கண்காணிப்பு அமைப்பை உருவாக்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளும் கண்காணிப்பு :

நேபாளத்தில் உள்ள தமிழகத்தவர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தேவையெனில் மீட்பு மற்றும் தாயகம் திரும்பும் ஏற்பாடுகள் குறித்தும் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட தமிழக அரசு தயாராக இருப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர்.

நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வரும் தமிழக அரசு, நேபாளத்தில் உள்ள தமிழகத்தவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி :

மத்திய வெளியுறவு துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது , அவர்கள் தொடர்ந்து நேபாள அரசுடனும் மற்றும் அங்கு இருக்கக்கூடிய இந்தியா அதிகாரிகளுடனும் ,ராணுவ அதிகரிகளிடனும் கண்காணித்து வருவதாக கூறியுள்ளனர் அதுமட்டுமல்லாமல் அங்கு இருக்க கூடிய மீட்பு பணிகளில் நம் ராணுவ அதிகாரிகளும் தொடர்ந்து உதவி வருவதாக தெரிவித்தனர்.

logo
Thamizh Alai
www.thamizhalai.in