தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 : நாளை மாலை ஓய்கிறது தேர்தல் திருவிழா : இறுதிக்கட்டப் பிரசாரத்தில் தலைவர்கள் தீவிரம்!

Tamil Nadu Election Campaign Ends: தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வு - முக்கிய அறிவிப்புகள்
The 'Festival of Elections' Concludes Tomorrow EveningLeaders Intensify Final-Phase Campaigning!
The 'Festival of Elections' Concludes Tomorrow EveningLeaders Intensify Final-Phase Campaigning!source:meta ai
1 min read

Tamil Nadu Election Campaign Ends: முடிவுக்கு வரும் தேர்தல் பிரச்சாரக் களம்

தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

விறுவிறுப்பாக இயங்கிவரும் தேர்தல் களம்

கடந்த மார்ச் 15-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, விறுவிறுப்பாக தமிழகம் முழுவதும் நிலவி வந்த தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் ஒரு முடிவுக்கு வருகிறது.

தமிழகத்தில் நான்கு முனைப் போட்டியால் அதிகரித்த பரபரப்பு

தமிழக அரசியலில் 1977-ம் ஆண்டுக்குப் பிறகு பொதுவாக இருமுனைப் போட்டியே நிலவி வந்தது.

திமுக, அதிமுக, தவெக மற்றும் நாதக

ஆனால், இந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக, தவெக மற்றும் நாதக என நான்கு முக்கியக் கட்சிகளுக்கு இடையே நேரடிப் போட்டி உருவாகியுள்ளது. இது அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகிறது.

களத்தில் முன்னணித் தலைவர்கள்

இறுதிக்கட்ட வாக்குகளைக் கவரும் நோக்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் மாநிலம் முழுவதும் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.

பிரசாரத்தில் தேசிய தலைவர்கள்

இவர்களுடன் பிரதமர் மோடி, ராகுல் காந்தி போன்ற தேசியத் தலைவர்களும் தமிழகத்தில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

வாக்குப்பதிவு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்

தமிழகம் முழுவதும் உள்ள 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக 75,064 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. ஏப்ரல் 23-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

பாதுகாப்பு பணியில் துணை ராணுவப்படையினர்

பாதுகாப்புப் பணிக்காக 295 கம்பெனி துணை ராணுவப் படைகள் மற்றும் 4.74 லட்சம் அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் அதிரடி கட்டுப்பாடுகள்: அமைதி நேரம்

நாளை மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை 48 மணி நேரத்தை 'அமைதி நேரமாக' தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பிரசாரம் செய்ய தடை

இந்த நேரத்தில் ஊர்வலங்கள் நடத்தவோ அல்லது ஊடகங்கள் வாயிலாகப் பிரச்சாரம் செய்யவோ கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏப்.21 முதல் ஏப்.23 வரை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 23-ல் பொது விடுமுறை

வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் பொருட்டு, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23-ம் தேதியைப் பொது விடுமுறையாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஊதியத்துடன் கூடிய விடுமுறை

அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவன ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in