Kantara Chapter 1 Box Office Collection Total : நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி தற்போது இந்திய சினிமாவால் உலகம் முழுவதும் பேசப்படும் நபராக மாறியுள்ளார். ஹோம்பேல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் கிரகந்தூர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் மட்டுமல்லாமல், ஐஎம்டிபி (IMDb) பட்டியலில் பிரபலங்கள் மத்தியில் ஒரு தனித்துவத்தை எட்டியுள்ளது.
காந்தாரா சாப்டர் 1 கதை
காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் கதை என்னவென்றால் ஈஸ்வரா பூந்தோட்டம் என்ற பகுதியில் அரிய வகையான மிளகு, ஏலக்காய், தேன், பட்டை போன்றவை கிடைக்கின்றன. அதுமட்டுமல்லாமல் அந்த பகுதியில் தெய்வ சக்தியும் இருப்பதால், அந்த இடத்தை அடைய பல குழுக்கள் முயற்சி செய்கின்றன். அது மட்டுமல்லாமல் ராஜா ஒருவரும், அவரின் வாரிசுகளும் அந்த இடத்தை அடைய நினைக்கின்றனர். இதனால், நடக்கும் போரில் காந்தாரா மக்களை அந்த தெய்வம் காப்பாற்றுகிறதா.இல்லையா.பிறகு நடந்தது என்பதுதான் இந்த திரைப்படத்தில் கதை.
காந்தாரா இயக்கம்
காந்தாரா முதல் பாகத்தில், ஒவ்வொரு சம்பவமும் உண்மைக்கு மிக நெருக்கமாக எடுக்கப்பட்டதே அந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. கர்நாடக மாநிலத்தின் மலைப்பகுதிகளில் நடக்கும் பழங்கால நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ரிஷப் ஷெட்டியின் தனித்துவமான கதை சொல்லும் பாணியும், திரைக்கதையும், நடிப்புத் திறனும் ரசிகர்களையும் படத்தையும் அவ்வளவு இணக்கமாக ஒருங்கிணைத்துள்ளது. படம் வெளியான முதல் நாளிலிருந்தே சமூக வலைத்தளங்களில் படத்தை அனைவரும் புகழ்ந்து வருவதால், திரையரங்குகளில் மக்கள் குவித்து வருகின்றனர்.
காந்தாரா 7 நாள் வசூல்
ரூ.450 கோடி வசூல்: ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்த இந்த படம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பன்மொழிகளில் வெளியிடப்பட்டது. இது ரிஷப் ஷெட்டியின் நட்சத்திர அந்தஸ்தை மேலும் உயர்த்தி உள்ளது.125 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படம் வசூலை வாரி குவித்து வரும் நிலையில், காந்தாரா சாப்டர் 1திரைப்படம் வெளியான ஏழாவது நாளில் உலகளவில் ₹450 கோடி வசூலை அள்ளி(Kantara Movie Box Office Collection) தொடர்ந்து தியேட்டரில் வெற்றி கரமாக ஓடிக்கொண்டு இருந்தது.
2025 ஆம் ஆண்டில் அதிகபட்ச வசூல்
இந்நிலையில் தற்போது இப்படத்தின் முழு வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப்படம் உலகளவில் ரூ. 818 கோடி வசூல் செய்துள்ளது என அறிவித்துள்ளனர். 2025ஆம் ஆண்டில் இந்திய சினிமாவில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை காந்தாரா சாப்டர் 1 படைத்துள்ள நிலையில், கே.ஜி.எப், பாகுபலி 1 மற்றும் 2 ஆம் பாகத்தை தொடர்ந்து அதிக வசூல் செய்துள்ள படங்களின் வரிசையில் காந்தாரா முதலிடத்தை பிடித்துள்ளது.
மேலும் படிக்க : Kantara: காந்தாரா வசூல் இவ்வளவா? உலகளவில் பேசப்படும் ரிஷப் ஷெட்டி!
காந்தாராவின் அடுத்த பாகம்
கலாச்சாரம் மற்றும் உணர்வுகள் நிறைந்த இந்தக் கதை, முதல் 'காந்தாரா' படத்தைப் போலவே பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இப்படத்தின் இறுதியில் ரிஷப் ஷெட்டி தி லிஜெண்ட் என படத்தின் அடுத்த பாகம் வரவுள்ளது என காந்தரா ரசிகர்களுக்கு ஒரு அப்டேட்டை கொடுத்துள்ளார். காந்தரா சாப்டர் 1 வசூல் உச்சத்தை தொட்டு, மக்கள் மனதை வென்றுள்ள நிலையில், அடுத்த பாகத்திற்காக ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.