Accidental Insurance Scheme expanded for Sabarimala Ayyappa Temple Pilgrims Collection of Rs 5 from devotees Image Courtesy : Sabarimala Ayyappa Temple Photo
ஆன்மிகம்

ஐயப்ப பக்தர்களுக்கு காப்பீட்டு விரிவாக்கம் ! : ரூ.5 மட்டுமே வசூல்

Sabarimala Pilgrims Accidental Insurance Expansion : சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கான விபத்துக் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

Bala Murugan

ஐயப்ப பக்தர்கள்

Sabarimala Pilgrims Accidental Insurance Expansion : உலகளவில் முதன்மையான கடவுள்களாக கருதப்பட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதும் பட்டியலில், ஐயப்ப கடவுள் முதன்மை வகிக்கிறார்.மேலும், ஐயப்ப சுவாமிக்கு உலக முழுவதும் ஆங்காங்கே கோவில்கள் கட்டப்பட்டு பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து தரிசனம் செய்து வருகின்றனர். அதில் கார்த்திகை, மார்கழி என்றால் ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருப்பர். இந்நிலையில், மாலை போடும் பக்தர்கள் ஒரு மண்டலம் விரதம் இருந்து கேராளவில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு சென்று இருமுடி கழற்றி மாலை அவிழ்த்து விரதங்கள் முடிப்பர். அதன்படி மலைக்கு செல்வோர் சிறுவழி, பெருவழி என தேர்வு செய்வதுண்டு. அதிலும் அவர்கள் மலைக்கு ஏறும்பொழுது விபத்து ஏற்பட்டு உயிரிழப்பர். இவை தொடரும் வகையில் போன ஆண்டு முதலே ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் போது விபத்தில் உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது.

காப்பீடு திட்டம் விரிவாக்கம்

அதிலும் குறிப்பாக, இந்த காப்பீட்டு திட்டம் பத்​தினம்​திட்​டா, கோட்​ட​யம், இடுக்​கி, ஆலப்​புழை உள்​ளிட்ட பகு​தி​களில் ஏற்​படும் விபத்​துகளில் உயி​ரிழக்​கும் ஐயப்ப பக்​தர்​களின் குடும்​பங்​களுக்கு மட்​டுமே காப்​பீட்​டுத் தொகை ரூ.5 லட்​சம் வழங்​கப்​பட்​டது. தற்​போது, இதன் எல்லை வரம்பு கேரள மாநிலம் முழு​வதும் விரிவுபடுத்​தப்​பட்​டுள்​ளது.

திரு​வி​தாங்​கூர் தேவஸ்​தான தலை​வர் பிர​சாந்த் பேச்சு

இதுகுறித்து திரு​வி​தாங்​கூர் தேவஸ்​தான தலை​வர் பிர​சாந்த் கேரள மாநிலத்​தில் எங்கு விபத்து நடந்​தா​லும், சம்​பந்​தப்​பட்ட பக்​தர்​களின் குடும்​பங்​களுக்கு ரூ.5 லட்​சம் காப்​பீடு வழங்​கப்​படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க : ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ் : நவ.15 முதல் சிறப்பு பேருந்துகள்

பக்தர்களிடம் 5 ரூபாய் வசூலிக்கப்படும்

மேலும், இறந்​தவர்​களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு​ செல்ல மாநிலத்​துக்​குள் ரூ.30 ஆயிர​மும், வெளி​மாநில பக்​தர்​களுக்கு ரூ.1 லட்​சம் வரை​யிலும் வழங்​கப்​படும் என்றும் இதே​போல, சந்​நி​தானத்​துக்கு மலை ஏறிச்​செல்​லும்​போது உயி​ரிழந்​தால் ரூ.2 லட்​சம் வழங்கப்​படும் என்று கூறினார். இந்த காப்​பீட்டு நிதிக்​காக ஆன்​லைன் தரிசன முன்​ப​திவு(Sabarimala Pilgrims Insurance Online Ticket) செய்​யும் பக்​தர்​களிடம் ரூ.5 பெறப்​படும் என்று தெரிவித்துள்ளார்.