Chief Minister Vijay honored police personnel by presenting them with medals! A new vehicle service was also launched!
தமிழ்நாடு காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சரின் பதக்கங்கள் வழங்கும் விழா, சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் திடலில் இன்று ( 31-07-2026) வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இவ்விழாவில் பங்கேற்றத் தமிழக முதல்வர் விஜய், காவல் துறை அதிகாரிகளுக்குப் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.
அணிவகுப்பு மரியாதை மற்றும் சாகச நிகழ்ச்சிகள்
அணிவகுப்புப் பார்வையிடல்
விழாத்திடலுக்கு வருகை தந்த முதல்வர் விஜய்க்கு காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து திறந்தவெளி ஜீப்பில் சென்று முதல்வர் அணிவகுப்பை பார்வையிட்டார்.
சாகச நிகழ்ச்சிகள்
விழா நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற பல்வேறு பிரிவினரின் சாகச நிகழ்ச்சிகளையும் முதல்வர் நேரில் கண்டு மகிழ்ந்தார்.
புதிய வாகனங்கள் தொடக்கம்
நிகழ்ச்சியின் போது காவல் துறைப் பயன்பாட்டிற்காகப் புதிய வாகனங்களின் சேவைகளை முதல்வர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
கடலோரக் காவல் படைக்கு 42 மஹிந்திரா ஜீப்கள் மற்றும் 96 ஹோண்டா இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது.
விருது பெற்றோர் விவரம்
இந்த விழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மொத்தம் 665 காவல் துறை அதிகாரிகள் பதக்கங்கள் மற்றும் விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ”தண்ணீர் தர முடியாது” : ’முதல்வர் விஜய் வர வேண்டாம்’: காவிரி ஆணைய உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு : D.K. சிவக்குமார்.!
=====