Kavignar Vairamuthu Request PM Narendra Modi Announcement Of Thirukkural As National Book 
தமிழ்நாடு

ஆகஸ்ட் 15 ஆவலுடன் காத்திருப்பேன்: மோடிக்கு வைரமுத்து வேண்டுகோள்

Vairamuthu on Thirukkural : இந்தியாவின் தேசிய நூலாக திருக்குறள் அறிவிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

MTM

Vairamuthu Request PM Modi on Thirukkural : பிரதமர் நரேந்திரமோடிக்கு எக்ஸ் தளத்தின் வழியாக கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள வேண்டுகோள் வருமாறு :

உங்கள் சுதந்திர தின உரையில் மக்களின் கருத்துகளையும் யோசனைகளையும் கேட்டு, ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு நீங்கள் அளித்த முக்கியத்துவத்திற்கு என் வாழ்த்துகள்.

நான் இதை தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியராக எழுதுகிறேன்.

நீங்கள் என்றென்றும் கொண்டாடி வரும் ‘திருக்குறள்’ என்பது இனம், மதம், மொழி, நாடு ஆகியவற்றை கடந்த ஒரு தார்மீக நெறிமுறைகளின் தொகுப்பாகும். இதன் மையத்தில் உள்ள ஒரே ஒரு ஒருங்கிணைக்கும் கோட்பாடு மனிதநேயம்!

மேலும் படிக்க : சுதந்திர தின உரை யோசனைகள் : நாட்டு மக்களுக்கு பிரதமர் அழைப்பு

திருக்குறள் இந்தியாவின் ‘தேசிய நூல்’(Thirukkural As National Book) ஆக அறிவிக்கப்பட வேண்டும் என்பது தமிழர்களின் நீண்ட காலக் கனவும், நிறைவேறாத வேண்டுகோளுமாகும். 79வது சுதந்திர தினத்தில் நாட்டு மக்களுக்கு உங்கள் உரையில் ‘திருக்குறள்’ இந்தியாவின் ‘தேசிய நூல்’ ஆக அறிவிக்கப்பட வேண்டும் என விரும்புகிறோம்.

நீங்கள் கோரியபடி, இந்த பரிந்துரையை ‘நமோ’ செயலியிலும் பகிர்ந்து கொள்வோம். திருக்குறள் பற்றிய இத்தகைய அறிவிப்பு, உலகின் கலாச்சார செல்வத்திற்கு இந்தியாவின் உன்னத பங்களிப்பாகக் கருதப்படும். இந்தக் கனவை நனவாக்க எல்லா முயற்சிகளையும் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் படிக்க : திரைப்பட விருது:சிறந்த நடிகர் ஷாருக், துணை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்

ஆகஸ்ட் 15 அன்று, நல்ல செய்திக்காக தொலைக்காட்சி முன் ஆவலுடன் காத்திருப்பேன். இவ்வாறு அந்தப்பதிவில் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.