நீடிக்கும் ஈரான் இஸ்ரேல் போர்
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குல் இன்று 6-வது நாளை எட்டியிருக்கும் நிலையில் ஈரான் தலைநகர் டெஹ்ரானின் பல பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத வகையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
தொடரும் போர் அமெரிக்காவிற்கு அதிகரிக்கும் செலவு
ஈரானுக்கு எதிரான போரில் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். போர்ட் உட்பட உலகின் மிகப்பெரிய 2 விமானம் தாங்கிக் கப்பல்களை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது.
இந்தக் கப்பல்களை இயக்க ஒவ்வொரு கப்பலுக்கும் ஒரு நாளைக்கு தலா ரூ.58 கோடி செலவாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது,
அதே சமயம் ராணுவ வீரர்களைக் குவிப்பதற்கும் அவர்களின் தேவைகளுக்கும் பராமரிப்பிற்கும் இதுவரை சுமார் ரூ.5,500 கோடி செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
முதல் நாளில் மட்டும் சுமார் ரூ.6,900 கோடி செலவிட்டுள்ளதாக்க தெரிவித்துள்ளது.
போர் நீடித்தால் செலவு அதிகரிக்கும்
இந்த போர் தொடர்ந்து நீடித்தால் அமெரிக்காவிற்கு ரூ.3.67 லட்சம் கோடி முதல் ரூ.10.57 லட்சம் கோடி வரை செலவாகும் என்று நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர். அதற்கு மேலும், போர் நீடித்தால், ரூ.18.87 லட்சம் கோடி செலவாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க :ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர் : 1,000ஐ தாண்டிய உயிரிழப்பு : தற்போதைய நிலவரம் என்ன?
ஈரானுக்கு வழங்கப்படும் நிதியாலும் செலவு அதிகரிக்கலாம்
ஈரான் இஸ்ரேல் அமெரிக்கா போரானது தொடர்ந்து நீடிக்குமேயானால் செலவானது அதிகரிக்கும் என்றும் ,அதாவது இஸ்ரேலுக்கு வழங்கப்படும் நிதி உதவியையும் கருத்தில் கொண்டால், இந்த செலவு அமெரிக்க நாட்டுக்கு மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
அதுமட்டுமின்றி மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் பல, ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளதால் செலவு மதிப்பு இன்னும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க :லெபனானின் முக்கிய இடங்களை கைப்பற்ற வேண்டும் : இஸ்ரேல் படைகளுக்கு நெதன்யாகு உத்தரவு