

திரைப்பயணமும் சமீபத்திய வெற்றியும்
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா லட்சுமி, தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறார்.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கட்டா குஸ்தி - 2' திரைப்படம் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து, மலையாளத்தில் இவர் நடிப்பில் உருவான 'ஆஷா' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கிண்டல்களால் ஏற்பட்ட மன உளைச்சல்
இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து நடிப்பதைத் தவிர்ப்பதற்கான காரணத்தை ஐஸ்வர்யா லட்சுமி வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
"கிங் ஆஃப் கொத்தா திரைப்படத்தின் போது நடிகர் துல்கர் சல்மானை நான் 'ராஜுவேட்டா' என்று அழைத்தேன். ஆனால், அது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கேலி கிண்டலாக மாறியது.
மனதளவில் பெரிதும் பாதித்தது
'ஹலோ மம்மி' படப்பிடிப்பின் போது உதவி இயக்குநர் ஒருவர் என்னைக் கேலியாக 'ராஜுவேட்டா' என்று அழைத்தபோது, அந்த எதிர்மறையான விமர்சனங்கள் என்னை மனதளவில் பெரிதும் பாதித்தது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாய்ப்புகளை நிராகரித்த பின்னணி
இந்தக் கேலி கிண்டல்கள் காரணமாகவே, இனிமேல் துல்கர் சல்மானுடன் இணைந்து நடிப்பதை தவிர்க்கலாம் என்ற முடிவுக்கு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
"அதன் பிறகு அவருடன் நடிக்க வாய்ப்புகள் வரும்போதெல்லாம் தொடர்ந்து மறுத்து வருகிறேன். சமீபத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு துல்கருடன் இணைந்து ஒரு விளம்பரப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.
மனம் திறந்து பேசிய ஐஸ்வர்யா லட்சுமி
இருப்பினும், மீண்டும் ஏதேனும் சர்ச்சைகள் உருவாகி அந்த விளம்பரமும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அதனையும் நிராகரித்துவிட்டேன்" என்று ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் கடைசி திரைப்படம் : 'புலவர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
=====