
‘ஆண்டர்சன் சச்சின் டிராபி’ டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றதான் மூலமாக 1-0 என கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது. இந்தநிலையில், 2வது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நாளை தொடங்குகிறது.
இந்தப் போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது.
ஸாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங், ஷோயப் பஷீர் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இடம்பெற்றிருந்தார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அவர் அணிக்கு வந்தாலும், ஆடும் லெவனில் அவர் இடம்பெறவில்லை.
இதேபோன்று, இந்திய அணியில் பும்ரா இடம் பெறுவாரா என்பது சஸ்பென்சாகவே உள்ளது. அவர் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டாலும், அவை எந்தெந்த போட்டிகள் என்பது இதுவரை தெளிவுப்படுத்தப்படவில்லை.
இந்திய அணி பந்து வீச்சில் பின்தங்கி இருக்கும் நிலையில், பும்ரா இல்லாவிட்டால், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இங்கிலாந்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
====