

பிரதமரின் பால புரஸ்கார் விருது
Vaibhav Suryavanshi Wins Rashtriya Bal Puraskar 2025 at Age 14 : வீரம், கலை, கலாசாரம், சமூக சேவை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் குழந்தைகளுக்கு பிரதமரின் தேசிய சிறார் விருது ( ராஷ்ட்ரிய பால புரஸ்கார்) விருது ஆண்டுதோறும் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இந்தாண்டுக்கான விருதுக்கு 20 சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு தலைமை வகித்தார். தேர்வு செய்யப்போருக்கு அவர் பால புரஸ்கார் விருதுகளை வழங்கினார்.
சூர்யவன்ஷி - பால புரஸ்கார் விருது
கிரிக்கெட் போட்டிகளில் சாதனை மேல் சாதனை குவித்து வரும் 14 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி பெற்றுக் கொண்டார். இது அவருக்கு கிடைத்து இருக்கும் மிகப்பெரிய கௌரவமாக பார்க்கப்படுகிறது. விரைவில் இந்திய அணியில் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.
பிகார் அணியில் சூர்யவன்ஷி
விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் பிகார் அணிக்காக விளையாடி வருகிறார் வைபவ் சூர்யவன்ஷி, அதிரடியாக விளையாடி 36 பந்தில் சதம் அடித்தார். இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம் அடித்த இளம் வீரர் எனும் சாதனையை படைத்தார்.
இளம்புயல் சூர்யவன்ஷி
59 பந்துகளில் 150 ரன் எட்டியபோது அதிவேக 150 ரன்கள் எடுத்த ஏபிடி வில்லியர்ஸின் சாதனையை முறியடித்தார். இந்தப் போட்டியில் 84 பந்துகளில் 190 ரன் குவித்தார்.
இளம் வயது சாதனையாளர்
இவர் ஏற்கனவே 2025 பிரீமியர் கிரிக்கெட் சீசனில் ராஜஸ்தான் அணிக்காக 38 பந்துகளில் 101 ரன் அடித்து, டி20 ஆண்கள் கிரிக்கெட்டில் சதம் அடித்த மிக இளைய வீரர் ஆனார் சூர்யவன்ஷி.
அண்மையில் நடந்து முடிந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடரில் 95 பந்தில் 171 ரன் சேர்த்தார். 56 பந்தில் சதம் அடித்தார் சூர்யவன்ஷி என்பது குறிப்பிடத்தக்கது.
=================