

லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்டிங்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் குவித்தன.
ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 4வது நாள் ஆட்டத்தில் 96 ஓவர்களில் 364 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.
371 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 4வது நாள் ஆட்ட
முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் சேர்த்தது.
கைவசம் 10 விக்கெட்கள் முழுமையாக இருந்த நிலையில் வெற்றிக்கு 350 ரன்கள் தேவை என்ற நிலையில் இங்கிலாந்து அணி கடைசி நாள் ஆட்டத்தை விளையாடியது.
ஸாக் கிராவ்லியும், பென் டக்கெட்டும் சீராக ரன்கள் சேர்த்தனர். பென் டக்கெட் 121 பந்துகளில், 14 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இது அவரது 6வது சதம்.
மறுமுனையில் நிதானமாக விளையாடிய ஸாக் கிராவ்லி அரை சதத்தை கடந்தார்.
இங்கிலாந்து அணி 40.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.
இதேபோன்று, 2வது முறையும் மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்ட போதும், அது இந்தியாவுக்கு கைகொடுக்கவில்லை.
நிதானமாகவும், உறுதியுடனும் விளையாடிய இங்கிலாந்து வீரர்கள், 82 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டினர்.
இதையடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் முதல் டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து கைப்பற்றியது.
இரண்டு இன்னிங்சிலும் இந்தியா சிறப்பான ரன்களை குவித்து இருந்தாலும், பவுலிங்கில் ஏமாற்றம் அளித்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
=====