

5 மாநிலத் தேர்தல்
இந்த ஆண்டு புதுச்சேரி, கேரளம், அசாம், தமிழகம், மேற்கு வங்க மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
புதுச்சேரி தேர்தல்
புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. இந்தத் தேர்தலில் ஆளும் என்.ஆர் காங்கிரஸ் - பாஜக - அதிமுக - லஜக ஒரு அணியாக வும்,
காங்கிரஸ் - திமுக - விடுதலைச் சிறுத்தைகள் ஒரு அணியாகவும் மோதுகின்றன. இந்திய கம்யூனிஸ்ட் ஒரு தொகுதியிலும், மார்க்சிஸ்ட் 2 தொகுதிகளிலும் தனியாக போட்டியிடுகின்றன. தவெக கூட்டணி 30 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சி 28 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது.
அதிருப்தியாளர்கள் தனித்து போட்டி
பிரதான கட்சிகளில் சீட் கிடைக்காத முக்கிய பிரமுகர்கள் சிலரும் பல்வேறு தொகுதிகளில் சுயேச்சையாக களமிறங்கியுள்ளனர். புதுச்சேரி தேர்தல் களத்தில் மொத்தம் 117 சுயேச்சைகள் உட்பட 294 வேட்பாளர்கள் உள்ளனர்.
கேரளம் சட்டசபை தேர்தல்
கேரளத்தில் மார்க்சிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
140 தொகுதிகளிலும் நாளை ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கூட்டணி ஆட்சியை தக்க வைக்குமா, காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுமா? பாஜகவின் வெற்றி வாய்ப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அசாம் பேரவை தேர்தல்
அசாமில் ஆளும் பாஜக - காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அந்த மாநிலத்தில் 126 தொகுதிகள் உள்ளன. ஆளும் தேசிய ஜனநாயக் கூட்டணியில் பாஜக 89 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
அதன் கூட்டணி கட்சியான அசாம் கண பரிஷத் 26, போடோலேண்ட் மக்கள் முன்னணி 11 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் தலைமையிலான அசாம் சோன்மிலிட்டோ மோர்ச்சோ கூட்டணியில் காங்கிரஸ் 95 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
நாளை வாக்குப்பதிவு
மூன்று மாநிலங்களிலும் நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு, மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில் துணை ராணுவம் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
=================