நாளை கூடுகிறது காவிரி நீர் ஒழுங்காற்று குழு : தமிழகத்திற்கான தண்ணீர் திறப்பு குறித்து ஆலோசனை..!

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கோரிய வழக்கை வரும் 13 ம் தேது உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துகொள்ளும் நிலையில் டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் ஒழுங்காற்று குழு
Cauvery Water Regulation Committee to meet tomorrow; to discuss water release for Tamil Nadu
Cauvery Water Regulation Committee to meet tomorrow; to discuss water release for Tamil Nadugoogle
1 min read

நாளை கூடுகிறது காவிரி ஒழுங்காற்று குழு

காவிரி  நீர் ஒழுங்காற்று குழுவின் 139-ஆவது கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது.அதில் காவிரியில் இருந்து ஆகஸ்ட் மாதத்தில் திறந்து விடப்பட வேண்டிய  தண்ணீர்  குறித்து விவாதிப்பதற்காக காவிரி நீர் ஒழுங்காற்று குழுவானது கூடுகிறது

தமிழகத்திற்கான உரிய நீரை திறந்துவிடக் கோரி வலியுறுத்தல்

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகள் நாளை டெல்லியில் நடைபெற உள்ள ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பங்கேற்கும் நிலையில் , தமிழகத்திற்கான தண்ணீர் திறந்து விடக்கோரி முக்கியமான ஆலோசனையானது இந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட இருக்கிறது

காவிர் நீர் வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் , முக்கியத்துவம் வாய்ந்த்தாக பார்க்கப்படும் காவிரி ஒழுங்காற்று கூட்டம்

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விடக் கோரிய மேகேதாட்டு காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில்

வழக்கின் விசாரணையை வரும் 13ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் உறுதியளித்தியிருக்கும் நிலையில் இந்த கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது

குறிப்பாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 88 டிஎம்சி திறக்க வேண்டிய நிலையில் வெறும் 10 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கர்நாடகா திறந்து உள்ளது

இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட தண்ணீரின் அளவை கர்நாடக தர மறுத்திருந்திருந்தது , இந்த சூழலில் கவனம் பெறும் இந்த கூட்டம்

முன்னதாக கடந்த ஜூலை 28 அன்று நடந்த கூட்டத்தில், வினாடிக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்ட நிலையில், போதிய மழை இல்லை எனக் கூறி கர்நாடகா அதற்கு மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் வரும் ஆகஸ்ட் 13 அன்று விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக நாளை நடக்கும் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு முக்கியமானதாக கருதப்படுகிறது.

=======================

logo
Thamizh Alai
www.thamizhalai.in