

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்
கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்ட மன்றங்களுக்கு ஏப்ரல் மாதம் தேர்தல் நடந்தது. இந்த ஐந்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.
வரலாற்று சாதனையாக வாக்குப்பதிவு
ஐந்து மாநிலங்களிலும், இதுவரை நடந்த தேர்தல்களை விட அதிக அளவில் வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைக்கப்பட்டது. அதிலும் இந்த முறை பெண்கள் சாதித்து இருக்கிறார்கள் என்பது தான் சிறப்பு.
மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு
294 தொகுதிகளை மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் அதிகபட்சமாக 93.71 % வாக்குகள் பதிவானது. இந்த மாநிலத்தில் மொத்தம் 6.81 கோடி வாக்காளர்களில் 6.38 கோடிக்கும் அதிகமானோர் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
பெண் வாக்காளர்கள் சாதனை
பெண் வாக்காளர்களின் வாக்கு 93.8 % பதிவாகியுள்ளது. இது ஆண்களின் 92.06 % விட சற்று அதிகமாகும்.
தமிழகத்திலும் பெண்கள் ஆர்வம்
தமிழ்நாட்டில் 5.74 கோடி வாக்காளர்களில் கிட்டத்தட்ட 4.8 கோடி வாக்குகள் (85.01 %) பதிவாகியுள்ளது. ஆண்களில் 83.77 % வாக்குப் பதிவாகியுள்ளது. பெண் வாக்காளர்கள் 86.2 % என அதிகமாக பதிவாகியுள்ளது.
அசாம் சட்டமன்ற தேர்தல்
அசாமிலும் ஏராளமானோர் வாக்களித்தனர். இறுதி வாக்குப்பதிவு 85.74 % எட்டியது. மாநிலத்தில் 2.15 கோடிக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. பெண் வாக்காளர்கள் 86.53 % வாக்களித்தனர். இது ஆண் வாக்காளர்களிடையே பதிவான 84.95 % விட சற்றே அதிகம்.
கேரளத்திலும் சாதித்த பெண்கள்
கேரளத்தில் 78.11 % வாக்குப்பதிவு பதிவானது. அங்கு 2.12 கோடிக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. பெண் வாக்காளர்களின் பங்கேற்பு 81.17 %, ஆண்களின் பங்கேற்பு 74.9% வும் இருந்தது.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்
புதுச்சேரியில் 89.82 % வாக்குப்பதிவு பதிவானது. யூனியன் பிரதேசத்தில் 8.5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. இங்கும் பெண் வாக்காளர்களின் பங்கேற்பு அதிகளவான 91.39 % ஆக இருந்தது.
மகளிர் நலத் திட்டங்கள்
எனவே, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் பெண்களை அதிக அளவில் ஈர்த்து வருவதே, அதிக வாக்குகள் பதிவானதற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.
=======================