வடகிழக்கு மாநிலங்களை புரட்டி போட்ட வெள்ளம்
வடமாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்து கனமழை மற்றும் வெள்ளம் வடகிழக்கு மாநிலங்களை புரட்டி போட்டியிட்டுள்ளது.இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்கை முடங்கியுள்ளது
பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள்
குறிப்பாக இந்த பெருவெள்ளத்தால் வடகிழக்கு மாநிலங்களுக்கான அசாம், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது.
அசாமின் தேமாஜி, நல்பாரி, திப்ரூகர், சிரங், லக்கிம்பூர், கோக்ராஜார் மாவட்டங்களில் பெருவெள்ளத்தால பலத்த சேதம் அடைந்திருக்கிறது
22,000-க்கும் மேற்பட்டோர் வீடு, உடைமைகளை இழந்து தவிப்பு
தொடர் கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் ,22,000-க்கும் மேற்பட்டோர் வீடு, உடமைகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். குறிப்பாக 1,690 ஹெக்டேரில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் சேதமடைந்து உள்ளதால் அவர்களின் இயல்பு வாழ்க்கை கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது
போக்குவரத்து சேவையிலும் கடுமையான பாதிப்பு
கடுமையாக ஏற்ப்பட்ட இந்த வெள்ள பாதிப்பால் போக்குவரத்து , ரயில் சேவையில் கடுமையான பாதிப்புகள் ஏற்ப்பட்டுள்ளது
குறிப்பாக அசாமின் அர்ச்சிபதார் மற்றும் சிமென் சப்பாரி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ஆற்றுப் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளதால அந்த பகுதிகளில் ரயில் சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது ,
முதல்வர் தெரிவித்துள்ளதாவது
கனமழையால் அசாமின் தேமாஜி மாவட்டம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் என்னோடு ஆலோசனை நடத்தினார். அசாமுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அவர் உறுதி அளித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்
கனமழை அதிகரிக்கும் : வானிலை மையம் எச்சரிக்கை
வெள்ள பாதிப்பால் அங்கு சிக்கித் தவித்த 30 சுற்றுலாப் பயணிகள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது
தயார் நிலையில் பேரிடர் மீட்பு பணியில் வீரர்கள்
.எதிர்வரும் நாட்களில் இன்னும் அதிகமான் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது , முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள், அந்தந்த மாநிலங்களின் பேரிடர் மீட்புப் படை வீரர்கள் வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
=======================