நீடிக்கும் போர்
தொடர்ந்து நீடித்து வரும் போர் பதற்றமான சுழல் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை உச்சத்தை எட்டியுள்ளது . இதன் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடானது ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக ,சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலை உயர்ந்து கட்டணங்கள் வில்யாணத்து எட்டியுள்ளது.
இரண்டாவது முறையாக விலை உயர்வு
டெல்லியில் இதன் விலை கிலோ லிட்டருக்கு 76.55 டாலர் அதிகரித்து, தற்போது 1,511.86 டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து இரண்டாவது மாதமாக மேற்கொள்ளப்படும் விலை உயர்வாகும்.
விலை உயர்வு : சர்வதேச விமனங்களுக்கு மட்டும் பொருந்தும்
இந்த விலை உயர்வு சர்வதேச விமான நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணக் கட்டணங்கள் உயரக்கூடும்.
எனினும், உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கான எரிபொருள் விலையில் ஒன்றிய அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை என்பதையும் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு விமான கட்டணத்தில் மாற்றம் இல்லை
இந்திய விமான நிறுவனங்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், உள்நாட்டுப் போக்குவரத்திற்கான எரிபொருள் விலையை மட்டும் அரசு கட்டுக்குள் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பயணிகளுக்கு கூடுதல் சுமை
இந்த சேவை பயணிகளுக்கு ஒரு கூடுதல் சுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது.
=============