

70 ஆண்டுகளை நிறைவு செய்த இந்தியாவின் காப்பீட்டு ஜாம்பவான் :
1956 செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC), இன்று தனது 70-வது ஆண்டு பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
கடந்த ஏழு தசாப்தங்களாக கோடிக்கணக்கான இந்திய குடும்பங்களின் நிதி பாதுகாப்பிற்கு துணைநின்று வரும் LIC, நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக திகழ்கிறது.
245 தனியார் காப்பீட்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட LIC, இன்று இந்திய காப்பீட்டு துறையின் நம்பிக்கையின் அடையாளமாக விளங்குகிறது.
தலைமுறைக்கேற்றவாறு புதிய திட்டங்கள் :
70-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, LIC சமீபத்தில் ‘பீமா பிளாட்டினம்’ (Bima Platinum) மற்றும் ‘ஜீவன் ரக்ஷா’ (Jeevan Raksha) என்ற இரண்டு புதிய காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் பீமா பிளாட்டினம் திட்டம் சேமிப்பு மற்றும் பாதுகாப்பை ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், ஜீவன் ரக்ஷா திட்டம் தூய ஆயுள் காப்பீட்டு பாதுகாப்பை மையமாகக் கொண்டதாகும்.
தொடர்ச்சியாக புதிய தயாரிப்புகள் :
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் LIC, ஜன் சுரக்ஷா, பீமா லக்ஷ்மி, பீமா கவச், புரொடெக்ஷன் பிளஸ், ஜீவன் உத்சவ் சிங்கிள் பிரீமியம் உள்ளிட்ட பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
மாறிவரும் வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப சேமிப்பு, முதலீடு, ஓய்வூதியம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு தயாரிப்புகளை LIC வழங்கி வருகிறது .
புதிய டிஜிட்டல் பரிணாமத்தில் LIC :
காப்பீட்டு சேவைகளை மேலும் எளிதாக்கும் நோக்கில், 2026-ஆம் ஆண்டு ‘MyLIC’ மற்றும் ‘Super Sales Saathi’ எனும் புதிய செயலிகளையும் LIC அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மற்றும் முகவர்கள் பல சேவைகளை டிஜிட்டல் முறையில் எளிதாக பெற முடிகிறது.
கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை :
LIC-யின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அதன் உயர்ந்த காப்பீட்டு கோரிக்கை தீர்வு விகிதம், பரந்த முகவர் வலையமைப்பு மற்றும் மக்களின் நம்பிக்கை ஆகியவை கருதப்படுகின்றன.
இந்தியாவின் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை தனது சேவையை விரிவுபடுத்தியுள்ள LIC, எதிர்காலத்திலும் நவீன தொழில்நுட்பம் மற்றும் புதிய தயாரிப்புகள் மூலம் தனது முன்னணி இடத்தை தக்கவைத்துக் கொள்ள முயற்சித்து வருகிறது.
==============