எல்பிஜி உற்பத்தி 30% அதிகரிப்பு : மக்கள் பீதி அடைய வேண்டாம் : மத்திய அரசு உறுதி!

இந்தியாவில் சமையல் எரிவாயு எல்பிஜி உற்பத்தி 30% அதிகரித்துள்ளதகவும் மக்கள் யாரும் தட்டப்படு குறித்து பீதி அடைய வேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது
LPG production increases by 30%: People should not panic - Central Government announcement
LPG production increases by 30%: People should not panic - Central Government announcement google
1 min read

நீடித்து வரும் போர் :எரிபொருள் தட்டுப்பாடு

தொடர்ந்து நீடித்து வரும் ஈரான் அமெரிக்கா போரால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது .முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரினை மூடப்பட்டுள்ளதால் எரிபொருள்களுக்கான தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளது .

இதனால் இந்​தி​யா​வில் சமையல் எரி​வாயு சிலிண்​டர் (எல்​பிஜி) விநி​யோகம் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளது. வளைகுடா நாடுகளில் கத்​தார் மற்​றும் சவுதி அரேபியா போன்ற நாடு​களில் இருந்து எல்​பிஜி வருவதில் கடுமையான தடையானது ஏற்பட்டுள்ளது

பதற்றத்தால் மக்கள்

இதனால் கடந்த சில நாட்​களாக வணிக பயன்​பாட்​டுக்​கான சிலிண்​டர் விநி​யோகம் நிறுத்​தப்​பட்​டுள்​ளது. இதன் காரணமாக அச்சமடைந்த ​பொதுமக்கள் , வீட்டு உபயோக சிலிண்​டருக்​கான புக்​கிங்கை அதிக அளவில் செய்​யத் தொடங்​கினர்.

போன் மூலம் அதிக அளவில் புக்​கிங் செய்​யப்​படு​வ​தால் அந்த சிஸ்​டம் செயலிழந்​த நிலையில் எல்​பிஜி ஏஜென்சி முன்பு அதிக அளவில் பொது​மக்​கள் குவி​யத் தொடங்​கினர்

எல்​பிஜி உற்​பத்தி 30 சதவீதம் அதிகரித்துள்ளது

இந்த எரிவாயு குறித்த தேவையற்ற வதந்தியால் மக்கள்பெரும் பதற்ற நிலைக்கு ஆளாகி வருகின்றனர் .இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ,எல்​பிஜி சிலிண்​டர் உற்​பத்தி 30 சதவீதம் அதிகரித்துள்​ள​தாக​வும், மக்​கள் பீதி அடைய வேண்​டாம் என்​று அறி​விப்பு வெளி​யிட்​டுள்​ளது.

மேலும் படிக்க :தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை : எண்​ணெய் நிறுவனங்​கள் எச்சரிக்கை

இதுகுறித்து மத்​திய பெட்​ரோலியத் ​துறை இணை செயலர் சுஜாதா சர்மா கூறிய​தாவது

வழக்​க​மாக தினந்​தோறும் நாடு முழு​வதும் 55.7 லட்​சம் பேர் எல்​பிஜி சிலிண்​டர் புக்​கிங் செய்​வார்கள். சிலிண்​டர் கிடைக்​காது என்று கருதி, கடந்த சில நாட்​களாக 75.7 லட்​சம் பேர் சிலிண்​டருக்​காக புக்​கிங் செய்து வரு​கின்​றனர்.

இந்​தப் பிரச்​சினையை சரி செய்​யும் முயற்​சி​யில் மத்​திய அரசு தீவிர​மாக இறங்​கி​யுள்​ளதாகவும் . இதற்​காக எல்பிஜி சிலிண்​டர் உற்​பத்​தியை 30 சதவீதம் அதி​கரித்​துள்​ளோம். எனவே, சிலிண்​டர் கிடைக்​காது என பொது​மக்​கள் அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in