மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு : தொடர் அமளியில் முடங்கிய அவைகள் : 11 மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றம்...!

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் முடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றோடு நிறைவு பெற்றது.

Monsoon Session of Parliament,  stalled by continuous disruptions from opposition parties, concluded
Monsoon Session of Parliament, stalled by continuous disruptions from opposition parties, concluded AI genetated
1 min read

மழைக்கால கூட்டத்தொடர்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 29ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் இருந்தே நீட் வினாத்தாள் லீக் விவகாரம், டெல்லி மாணவர் போராட்டத்தில் தடியடி, துப்பாக்கிச்சூடு பற்றி கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன.

எதிர்க்கட்சிகள் கடும் அமளி

இதனால், நாடாளுமன்றம் முழுமையாக நடைபெறுவதில் சிக்கல் இருந்தது. தினமும் அமளி, தள்ளிவைப்பு என குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றது.

12 மசோதாக்கள் தாக்கல்

இதில் உச்சநீதிமன்ற திருத்த மசோதா, பிறப்பு இறப்பு பதிவு திருத்த மசோதா, தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு மசோதா, பொதுத்தேர்வுகள் திருத்த மசோதா உள்பட 12 மசோதாக்கல் தாக்கல் செய்யப்பட்டன.

11 மசோதாக்கள் நிறைவேற்றம்

இதில் பொதுத்தேர்வுகள் திருத்த மசோதா மீது மட்டுமே விவாதம் நடைபெற்றது. இதில் இந்திய புள்ளிவிவர கழக மசோதா தவிர மற்றவை விவாதமின்றி நிறைவேற்றப்பட்டன.

இன்று காலை மக்களவை கூடியதும், எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா அவைக்கு வந்த போதும், விவாதம் ஏதும் நடைபெறாமல் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

மாநிலங்களவை, 12 மணி வரை நடைபெற்ற பிறகு, மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இரு அவைகளும் வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடப்பட்ட பிறகே அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன.

====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in