

கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய ரயில்வே துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா 50,000-க்கும் மேற்பட்ட நவீன ரயில் பெட்டிகளை தயாரித்துள்ளதாக கூறினார்.
ரயில்வே உள்கட்டமைப்பு, உற்பத்தி திறன் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் நாடு வேகமாக முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் "மேக் இன் இந்தியா" திட்டத்தின் கீழ், ரயில்வே பெட்டிகள் மற்றும் நவீன ரயில்களின் உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளதாக மோடி தெரிவித்தார்.
குறிப்பாக LHB பெட்டிகள், வந்தே பாரத் ரயில்கள் மற்றும் மேம்பட்ட பயணிகள் வசதிகளுடன் கூடிய பெட்டிகள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
முந்தைய ஆட்சிக் காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 3,300-க்கும் குறைவான ரயில் பெட்டிகளே தயாரிக்கப்பட்ட நிலையில், 2014 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் 54,809 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இது ஆண்டுக்கு சராசரியாக 5,481 பெட்டிகள் என்ற சாதனையாகும்.
சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (ICF), கபூர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலை மற்றும் ராய்பரேலி நவீன ரயில் பெட்டி தொழிற்சாலை உள்ளிட்ட மையங்கள் மூலம் இந்தியா உலகின் மிகப்பெரிய ரயில் பெட்டி உற்பத்தியாளர்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவின் ரயில்வே உற்பத்தித் திறன் உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
===================
==============