உக்ரைன் போரை நிறுத்த மோடி, ஜின்பிங் ஆர்வம், உதவத் தயார் என அறிவிப்பு : ரஷ்ய அதிபர் புதின் வரவேற்பு...!

உக்​ரைன் போரை முடிவுக்​குக் கொண்டு வருவதற்​கான அமை​திப் பேச்​சு​வார்த்​தைக்கு உதவி செய்​யத் தயா​ராக இருப்​ப​தாக பிரதமர் மோடி​யும், சீன அதிபர் ஜி ஜின்​பிங்​கும் விருப்​பம் தெரி​வித்​தனர்.
PM Modi, Chinese President Xi Jinping willing to assist peace talks, bringing the Ukraine war to an end
PM Modi, Chinese President Xi Jinping willing to assist peace talks, bringing the Ukraine war to an endsource:thamizhalai,ai generated
1 min read

மோடி, புதின், ஜின்பிங் சந்திப்பு

டெல்​லி​யில் பிரிக்ஸ் மாநாட்​டின் போது பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டனர். அப்போது மூன்று தலைவர்களும் பல்வேறு சர்வேதச பிரச்சினைகள் பற்றி விவாதித்தனர். இந்த சந்திப்பு மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்ததாக தகவல் வெளியானது.

டிரம்ப் முயற்சி தோல்வி

புதின் பயணம் குறித்து ரஷ்ய செய்​தித் தொடர்​பாளர் திமித்ரி பெஸ்​கோவ் கூறிய​தாவது, உக்​ரைன் போரை முடிவுக்​குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மேற்​கொண்டு வரும் முயற்​சிகளுக்கு இது​வரை எந்​தப் பலனும் கிடைக்​க​வில்​லை.

மூன்று தலைவர்களின் நட்பு

இந்நிலை​யில், மோடி, ஜி ஜின்​பிங் உக்​ரைன் போரை நிறுத்த விருப்​பம் தெரி​வித்​துள்ள செய்தி முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாக பார்க்​கப்​படு​கிறது.

குறிப்​பாக, மாநாட்​டின் முதல் நாளில் மோடி, ஜி ஜின்​பிங் மற்​றும் புதின் ஆகிய மூவரும் கைகோர்த்து நின்ற காட்​சி, உலக அரங்​கில் அவர்​களின் நெருக்​க​மான உறவை​யும் ஒற்​றுமை​யை​யும் வெளிப்​படுத்​தும் வகை​யில் அமைந்​திருந்​தது.

உக்​ரைன் போரை முடிவுக்​குக் கொண்டுவர அதிபர் டிரம்ப், சமீபத்​தில் புதினுடன் தொலைபேசி​யில் உரை​யாடி​னார்.

அதற்கு முன்​ன​தாக அமெரிக்​கத் தூதர்​கள் ஸ்டீவ் விட்​காஃப் மற்​றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் மாஸ்கோ மற்​றும் கீவ் நகரங்​களுக்​குச் சென்று பேச்​சு​வார்த்தை நடத்​தியும் எந்​த தீர்​வும் கிடைக்​க​வில்​லை.

அமைதி முயற்சியில் இந்தியா

ரஷ்யா மற்​றும் உக்​ரைன் ஆகிய இரு நாடு​களு​ட​னும் நல்​லுறவைப் பேணி வரும் சில நாடு​களில் இந்​தி​யா​வும் ஒன்று என்​ப​தால், அமை​திப் பேச்​சு​வார்த்​தைக்​கான முக்​கிய​மான பால​மாக இந்​தியா உரு​வெடுத்​துள்​ளது.

புதினை சந்திக்க ஜெலன்ஸ்கி விருப்பம்

டிசம்​பர் மாதம் மியாமி​யில் நடை​பெறவுள்ள ஜி-20 மாநாட்​டில் அதிபர் புதின் பங்​கேற்​றால், தானும் அதில் கலந்​து​ கொண்டு அவரை நேரில் சந்​திக்​கத் தயா​ராக இருப்​ப​தாக உக்​ரைன் அதிபர் ஜெலென்​ஸ்கி தெரி​வித்​துள்​ளார்.

இந்த சந்​திப்பு நடை​பெற்​றால், போர் தொடங்​கிய பிறகு இரு தலை​வர்​களும் சந்​திக்​கும் முதல் நேர்​முக சந்​திப்​பாக இது அமை​யும்.

போரை முடிவுக்கு கொண்டு இந்தியாவும், சீனாவும் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில், புதின்-ஜெலன்ஸ்கி சந்திப்பு திருப்பு முனையாக இருக்கும் எனத் தெரிகிறது.

===================

logo
Thamizh Alai
www.thamizhalai.in